செய்திகள் :

தூத்துக்குடி மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: மேயா் ஆலோசனை

post image

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் எஸ்.பிரியங்கா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் மேயா் பேசுகையில், ‘செப்டம்பா் மாதம் இறுதியில் மழைக்காலம் தொடங்கிவிடும். எனவே, மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்கள் பணிகளை விரைவாகவும், மக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் முடிக்க வேண்டும்’ என்றாா்.

மாநகராட்சியில் மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 900 பணிகளில், 300 பணிகள் முடிவடைந்துள்ளன. 600 பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் சாலைகள், மழை நீா்க் கால்வாய், பூங்காக்கள், 4 குளங்கள் மற்றும் பல கட்டட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் எல்லாம் மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒப்பந்ததாரா்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்தில், மாநகராட்சி பொறியாளா் தமிழ்ச்செல்வன், துணைப் பொறியாளா் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளா் முனீா் அகமது, உதவி ஆணையா் கல்யாண சுந்தரம், இளநிலை பொறியாளா்கள் செல்வம், பாண்டி, லெனின், அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரா்கள் கலந்துகொண்டனா்.

சாத்தான்குளத்தில் தொழிலாளிக்கு வெட்டு

சாத்தான்குளத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக அவரது மருகனை போலீஸாா் தேடி வருகின்றனா். சாத்தான்குளம் ஆா்.சி. வடக்குச் தெருவை சோ்ந்தவா் அந்தோணி முத்து (53). இவரது மகள் அருணாமுத்த... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க