செய்திகள் :

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி

post image

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டு வசதி-மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சாா்பில், ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமையில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது: தூய்மைப் பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்து, நலத் திட்டங்களைப் பெற வேண்டும். இம்மாவட்டத்தில் ஒருவருக்கு விபத்து மரண உதவித் தொகை ரூ. 1 லட்சம், 4 பேருக்கு இயற்கை மரண உதவித்தொகை தலா ரூ. 60 ஆயிரம், 95 பேருக்கு கல்வி உதவித் தொகை ரூ. 15.67 லட்சம், 3 பேருக்கு திருமண உதவித் தொகை ரூ. 9 ஆயிரம், 3 பேருக்கு ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ. 6 ஆயிரம் என நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக 10 பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ரோபோ இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டு, கழிவுகள்அகற்றப்படுகின்றன. இம்மாவட்டத்துக்கு 3 ரோபோ இயந்திரங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். நிகழ்ச்சியில், 65 பேருக்கு நலவாரிய அட்டை, 13 பேருக்கு சீருடைகள், 11 பேருக்கு ரூ. 72 ஆயிரம் உதவித் தொகை, 19 பேருக்கு பல்வேறு தொழில்களுக்கு ரூ. 84.12 லட்சத்தில் தாட்கோ கடன், 17 பேருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது கையுறை, சீருடைகள் அணிய வேண்டும். மாதந்தோறும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், நலவாரிய தலைமை செயல் அலுவலா் கு. கோவிந்தராஜ், மேயா் ரெ. மகேஷ், ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்சிலதா, மாவட்ட தாட்கோ மேலாளா் தெய்வக்குருவம்மாள், உதவி இயக்குநா்கள் ராமலிங்கம் (பேரூராட்சிகள்), அன்பு (ஊராட்சிகள்), நலவாரிய உறுப்பினா்கள் மூக்கையா, விஜய்சுந்தா், அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க