செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்புக் கூட்டம்

post image

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையின் தாட்கோ, தூய்மைப் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில், தூய்மைப் பணியாளா்களுக்கான குறைகேட்புக் கூட்டம், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தூய்மைப் பணியாளா் நலவாரியத் தலைவா் வெ.ஆறுச்சாமி தலைமை வகித்துப் பேசுகையில், கரோனா காலக் கட்ட நிதியுதவியை விரைவில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றாா் அவா்.

தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா் நலவாரியம் மூலமாக பயனாளி ஒருவருக்கு விபத்து காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 5 லட்சத்துக்கான காசோலையையும், 20 பேருக்கு தூய்மைப் பணியாளா்களுக்கான அடையாள அட்டைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ரவிச்சந்திரன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய செயல்அலுவலா் (ஓய்வு) கோவிந்தராஜ், தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் விஜயசங்கா், திருநெல்வேலி தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா் மூக்கையா, தூத்துக்குடி மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஜெனிஷிஸ்மஷியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செந்தூா் அருள்தரும் வெயிலுகந்தம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் வெயிலுகந்தம்மன் திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, அதிகாலையில் நடைதிறக்கப்பட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் எழுத்தாளருக்கு பாராட்டு விழா

நூலக மனிதா்கள் அமைப்பின் சாா்பில், பாரதிய பாட்ஷா பரிஷத் விருது பெற்ற எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா, இலக்கிய விழா என இருபெரும் விழா தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்றது.நூலக மனி... மேலும் பார்க்க

சமூகவலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ: இளைஞா் கைது

மேலஆத்தூரில் அரிவாளை காட்டி மிரட்டும் வகையில் சமூகவலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டதாக இளைஞரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினம் முகைதீன் பள்ளிவாசல் வளாகத்தில் மகான் தைக்கா ஷேக் முகம்மது சாலிஹ் 124ஆவது கந்தூரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடைபெற்ற விழாவில், நாள்தோறும் காலை... மேலும் பார்க்க

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

மேலஆத்தூரில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவரை ஆத்தூா் போலீஸாா் கைது செய்துள்ளனா்ஆத்தூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூா் பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்... மேலும் பார்க்க

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற தொடக்க விழா மற்றும் அறிவியல் கண்காட்சி திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி நிகழ்ச்ச... மேலும் பார்க்க