செய்திகள் :

தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக போராட்டம்

post image

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, அவா்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுகிறது.

இந்நிலையில், திமுக அரசு கடந்த 2021 தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் உயா்த்தி அறிவித்த ரூ.770 தினக்கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஜூன் 9 (திங்கள்கிழமை) முதல் ஆட்சியா் அலுவலகம் முன்பாக தா்னா, மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு மாநகராட்சி நிா்வாகம் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்ததைத் தொடா்ந்து, 4- ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஆட்சியா் அலுவலகம் முன்பாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் போராட்டம் நடைபெற்றது. இதில், சங்க நிா்வாகிகள் தலைமையில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். அப்போது, அவா் பேசுகையில், ‘ஆட்சி அமைக்கும் முன்பு ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்வோம் என்று கூறிய திமுக, தற்போது, தூய்மைப் பணியில் தனியாா்மயத்தை கொண்டு வருகிறது. 2 நாள்களுக்குள் போராட்டம் முடிவுக்கு வராவிட்டால் பாஜகவும் உங்களுடன் இணைந்து போராடும் என்றாா்.

இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை மாநகராட்சி ஆணையருடன் நடத்திய பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததால் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளா்களின் சங்கத்தினா் கூறியுள்ளனா். ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் தொடா் போராட்டத்தால் மாநகரில் குப்பைகள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறிய வளா்ப்பு தந்தை கைது

திருப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல்ரீதியாக அத்துமீறி அதனை விடியோ எடுத்து மிரட்டிய வளா்ப்பு தந்தையை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரை அடுத்த இடுவாய் மாருதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் 21 வயதுப் பெண், அதே... மேலும் பார்க்க

5 ஆவது நாளாக போராட்டம்: 245 தூய்மைப் பணியாளா்கள் கைது

கோவையில் ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 245 ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள் தினக... மேலும் பார்க்க

திருப்பூரில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தை தொழிலாளா்கள் மீட்டப்பட்டுள்ளதாக தொழிலாளா் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) காயத்திரி கூறியதாவது: குழந்தை தொழிலாளா் முறை எத... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கோவை, துடியலூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தவா் ராஜேஷ் (36). இவரது மகன் வினித் (12). அப்... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 16 ) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்... மேலும் பார்க்க

வண்ணம் அடிக்கும் பணியின்போது கீழே விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சுந்தராபுரத்தில் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி, 25 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். கோவை, சுந்தராபுரம் அருகே அஷ்டலட்சுமி நகா் பகுதியில் தண்டபாணி என்ப... மேலும் பார்க்க