செய்திகள் :

தென்காசி: சொத்துவரி ரசீது கொடுக்க ரூ.15000 லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது!

post image

சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடுகப்பட்டி, தெற்குசத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 36). இவர், புளியங்குடியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டியுள்ளார்.

லஞ்சம் வாங்குதல்

காளிராஜன் புதிய வீட்டுக்கு சொத்துவரி கட்டுவதற்கு புளியங்குடி நகராட்சிக்குச் சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமரை சந்தித்து, தனது வீட்டுக்கு சொத்துவரி ரசீது போட்டுத்தரும்படி கேட்டுள்ளார். இந்தநிலையில் சொத்துவரி போட்டுத் தருவதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என அகமது உமர் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் தர விருப்பமில்லாத காளிராஜன், இதுகுறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், அகமது உமரை கையும் களவுமாக கைது செய்ய முடிவு செய்தனர்.

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அகமது உமரிடம் லஞ்சமாக கொடுக்கும்படி காளிராஜனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

அகமது உமர்

அதன்படி, சொத்துவரி ரசீது கேட்டு மீண்டும் புளியங்குடி நகராட்சிக்கு வந்த காளிராஜன், வருவாய் உதவியாளர் அகமது உமரை சந்தித்து அவர் கேட்டபடி ரூ.15ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை அகமது உமர் பெற்றுக்கொண்டபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ஸ்ரீவில்லிபுத்தூர்: கல்லூரி விடுதியில் மாணவர் மர்ம மரணம்.. போலீஸார் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் தனியார் பல்கலைக்... மேலும் பார்க்க

`பணத்துக்காக 25 வயது மூத்த பெண்ணுடன் ரகசிய திருமணம்..' - கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள குன்னத்துகால் பகுதியைச் சேர்ந்த ஷாகா குமாரி, நெய்யாற்றின்கரை பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவர்,52 வயது ஆகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி - தொழிலதிபர் மீது போக்சோவில் வழக்கு பதிவு

பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருள் சூசை(55). திருமணம் ஆனவர். தொழில் அதிபரான இவர் துபாய் நாட்டில் பல்வேறு தொழில்கள் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இவருக்கு சொந்தம... மேலும் பார்க்க

`Real Dragon' நேர்முகத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து `IT வேலை' பெற்ற நபர் - சிக்கியது எப்படி?

இந்த ஆண்டு வெளியான டிராகன் படத்தில் வருவதுபோல தெலங்கானாவைச் சேர்ந்த இளம் இஞ்சினியர் ஒருவர் நேர்முகத்தேர்வில் மோசடி செய்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.ஆன்லைன் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற... மேலும் பார்க்க

திருப்பூர் அரசு மருத்துவமனை: சிகிச்சைக்குப் பயந்த இளைஞர்; 4-வது மாடியில் இருந்து குதித்து பலி

மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாஸ் பன்வான்(30). இவர், மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு பணிக்குச் செல்வதற்காக ரயிலில் வந்துள்ளார். திருப்பூர் அருகே கூலிபாளையம் ரயில் நிலையத்தில், ரயில் வந்த... மேலும் பார்க்க

``எல்லா வலியை தாங்கியும் அது நடக்கல..'' - கீர்த்திகா உடலை பார்த்து அக்கா, தம்பி கதறிய சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு (55) பட்டியலினத்தை சேர்ந்தவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு துர்கா (34), மேனகா (29), கீர்த்திகா (27), தினேஷ... மேலும் பார்க்க