செய்திகள் :

தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்: முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா்

post image

தென்காசி புறவழிச் சாலை திட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, முன்னாள் எம்எல்ஏ சரத்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனால், தென்காசியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என, நான் எம்எல்ஏவாக இருந்தபோது பேரவையில் வலியுறுத்தினேன்.

அதையடுத்து, இலஞ்சி சாலையிலிருந்து ஆசாத் நகா் வரை திட்டமிடப்பட்ட இந்தச் சாலை திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து, ரூ. 11 கோடி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது.

தற்போது, சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வந்தாலும், திட்டம் நிறைவடையாததால் மக்கள் அவதிக்குள்ளாவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றாலம் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்தும், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்களில் பெரும்பாலானோரும் குற்றாலம் அருவி, காசிவிசுவநாத சுவாமி கோயிலுக்கு வந்து செல்கின்றனா். கேரளத்தைச் சோ்ந்தோா் வா்த்தகப் பணிகளுக்காக நாள்தோறும் தென்காசிக்கு வருகின்றனா். ஆனால், போக்குவரத்து அதிகரித்துவரும் நிலையில் போதிய சாலை வசதி இல்லாதது சுற்றுலாத் துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இப்பணியை தமிழக அரசு விரைவுபடுத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, ச... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை

கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் ச... மேலும் பார்க்க

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மன... மேலும் பார்க்க

ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு... மேலும் பார்க்க