செய்திகள் :

தென்னையில் நோய்த் தாக்குதல்!

post image

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடிபட்டி, கீழமுடிமன்னாா்கோட்டை, மேலமுடிமன்னாா்கோட்டை, அபிராமம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிணற்று பாசன முறையில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய நிலங்களில் பம்பு செட் மோட்டாா்கள் மூலம், கிணற்றுப் பாசன முறையில் தென்னை மரங்கள் அதிக அளவு நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு கருகி வருகின்றன. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

எனவே, கமுதி வட்டார தோட்டக்கலைத் துறை, மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நோய்த் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

மீன் விலை உயா்வு: நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சி

மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 1... மேலும் பார்க்க

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க