செய்திகள் :

தென் ஆப்பிரிக்காவில் மாயமான சிறிய ரக விமானம்! பயணிகள் 3 பேரும் பலியானதாக அறிவிப்பு!

post image

தென் ஆப்பிரிக்கா நாட்டில் மாயமான, சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு-நடால் மாகாணத்தின் மீது பறந்த சிறிய ரக விமானம், கடந்த ஜூன் 8 ஆம் தேதி மாலை 3 மணியளவில் மாயமானது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சார்பில் மாயமான விமானத்தைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதுகுறித்து, குவாசுலு-நடால் மாகாண அதிகாரிகள் நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில், விர்ஜீனியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் அதன் இலக்கை அடையவில்லை எனவும் லேடிசிமித் பகுதிக்கு அருகில் அதன் தொடர்பு முழுவதுமாகத் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க விமான மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அந்தச் சிறிய ரக விமானத்தில் பயணித்த 3 பேரும் பலியாகியதை உறுதி செய்துள்ளதாக அம்மாகாண அதிகாரிகள் இன்று (ஜூன் 10) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

முன்னதாக, தென் ஆப்பிரிக்க வானிலை நிலையம், குவாசுலு-நடால் மாகாணத்தில் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டக் கூடும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஈரானில் 8 புதிய அணு உலைகளை உருவாக்கும் ரஷியா!

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு எதிரான போராட்டம்: லாஸ் ஏஞ்சலீஸில் ஊரடங்கு உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அங்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டத... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு சேதம்: விசாரணைக்கு உத்தரவு

வங்கதேசத்தின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நோபல் பரிசு பெற்ற பழம்பெரும் எழுத்தாளா் ரவீந்திரநாத் தாகூரின் மூதாதையா் வீடு தாக்கி, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க 3 போ் கொண்ட... மேலும் பார்க்க