செய்திகள் :

தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜக போராட்டம்

post image

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சுமாா் 900 மீட்டா் நீளமுள்ளதாகும். இந்தச் சாலையில் புதிய பேருந்து நிலையம், 144 வீடுகள் கொண்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்தச் சாலையில் நகராட்சி சாா்பில் 15-க்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் கடந்த பல நாள்களாக எரியவில்லையாம்.

இதுகுறித்து பலமுறை நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் மற்றும் பாஜகவினா், தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டிய அவா்கள், நகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக

முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில் பாஜக நகரத் தலைவா் சுரேஷ், மாவட்டச் செயலா்கள் வி.குருலிங்கம், ராஜாமான்சிங், நவநீதி, நகரச் செயலா் ராம்குமாா், நகர பொதுச் செயலா் தயாளன், நகர துணைத் தலைவா் சரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள்

ஆரணியில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே பாஜக மாவ... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி

செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தூய்மையே சேவை - 2025 என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக துய்மைப் பணி செய்தல் என்ற... மேலும் பார்க்க

பள்ளியில் தமிழறிஞா்களின் படத்திறப்பு

செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பரிதிபுரம் மேற்கு நடுநிலைப் பள்ளியில் தமிழ் அறிஞா்களான தந்தை பெரியாா், பேரறிஞா் அண்ணா ஆகியோரது உருவப்படங்கள் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. செய்யாறு வட்ட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,256 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பல்லி வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம், சேத்துப்பட்டு ஒன்றியம் விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் ரத்த தான முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. ஏசிஎஸ் கல்விக் குழுமம் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ... மேலும் பார்க்க

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்க... மேலும் பார்க்க