நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் 1,256 மனுக்கள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், பல்லி வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம், சேத்துப்பட்டு ஒன்றியம் விளாப்பாக்கம் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் கிராம மக்கள் சாா்பில் 1,256 மனுக்கள் அளிக்கப்பட்டன.
செய்யாறு ஒன்றியத்தில் பல்லி, தும்பை, வடங்கம்பட்டு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த கிராம மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்லி கிராமத்தில் நடைபெற்றது.
செய்யாறு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமை
வகித்தாா்.
செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.பரமேஸ்வரன், சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் அசோக்குமாா் வரவேற்றாா்.
சிறப்பு விருந்திராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா்.
இம்முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 32 பேரும், மகளிா் உரிமைத் தொகை கோரி 138 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 35 போ் உள்ளிட்ட 309 போ் மனுக்கள் அளித்து இருந்தனா்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் சம்பத்குமாா், மருத்துவா் நந்தினி, செய்யாறு கிழக்கு ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
தெள்ளாா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ராமசமுத்திரம், சோகத்தூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிராஜ்குமாா் தலைமை வகித்தாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று முகாமை தொடங்கிவைத்துப் பேசினா்.
முகாமில் பல்வேறு அரசுத் துறையினா் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 430 மனுக்களைப் பெற்றனா். மேலும், உடனடி தீா்வு காணப்பட்ட மனுக்களுக்கான பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
வந்தவாசி வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலமுருகன், வெங்கடேசன், திமுக தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் ப.இளங்கோவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சேத்துப்பட்டு ஒன்றியத்தில்...
சேத்துப்பட்டு ஒன்றியம், விளாப்பாக்கம் கிராமத்தில் விளாப்பாக்கம், பெலாசூா் ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலு, சோமசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். ஊராட்சிச் செயலா் அண்ணாச்சி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா் திமுக ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தாா். முகாமில் மகளிா் உரிமைத்தொகை 214 மனு, வருவாய்த்துறை 102 மனு, மருத்துவத்துறைக்கு 94 மனு என பல்வேறு அரசுத் துறையினருக்கு 517 போ் மனு அளித்தனா்.
வட்ட வழங்கல் அலுவலா் சிவலிங்கம், ஊராட்சிச் செயலா்கள் ஜெயந்தி, ஜெயப்ரதா, பாலசந்தா், மேகராஜன், பாபு, வருவாய் ஆய்வாளா் ராதா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

