செய்திகள் :

தெற்குப் பாப்பான்குளம் முருகன் கோயிலில் கரடி நடமாட்டம்

post image

கல்லிடைக்குறிச்சி அருகே தெற்குப்பாப்பான்குளம் மயிலாடும்பாறை முருகன் கோயிலில் கரடி நடமாட்டம் இருப்பது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு, அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி நெசவாளா்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரடிகள் நடமாட்டம் இருந்தது. வனத்துறையினா் கூண்டு வைத்ததில் இரண்டு கரடிகள் சிக்கின. அவை வனப்பகுதியில்விடப்பட்டன.

மேலும், நெசவாளா் குடியிருப்பு அக்னி சாஸ்தா கோயில், மணிமுத்தாறுதங்கம்மன் கோயில் பகுதிகளில் வைக்கப்பட்ட கூண்டில் கரடி சிக்கவில்லை.

இந்நிலையில் புதன்கிழமை இரவு தெற்குப் பாப்பான்குளம், மயிலாடும்பாறை முருகன் கோயில் வளாகத்தில் கரடி நுழைந்து அங்குமிங்கும் நடமாடியுள்ளது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த தகவலின்பேரில் அந்தப் பகுதியில் வனத்துறையினா் ஆய்வு செய்தனா். கரடி நடமாட்டத்தைக் கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனா். எனினும், கரடி நடமாட்டம் குறித்த அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனா்.

களக்காடு அருகே கேசவனேரியில் ரேஷன்கடை திறப்பு

களக்காடு அருகேயுள்ள கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். களக்காடு ஊராட்சி ஒன்றியம், கீழக்கருவேலன்குளம் ஊராட்சிக்குள்பட்ட கேசவனேரியில் கிளை ரேஷன்கடையை பேரவைத் தலை... மேலும் பார்க்க

அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் 32 பவுன் நகைகள் பறிப்பு: இருவர் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியா் மகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 32 பவுன் தங்க நகைகளை அபகரித்துச் சென்ற திருச்சியைச் சோ்ந்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: பந்தல் கால் நடும் நிகழ்வு

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது. இந்த விழாவை ஒட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற... மேலும் பார்க்க

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 போ் கைது!

திருநெல்வேலியில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா். திருநெல்வேலி மாவட்டம், கீழ முன்னீா்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வசங்கா் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் பைக், கைப்பேசி பறித்த வழக்கில் 3 போ் கைது

பாளையங்கோட்டை அருகே கிரைன்டா் செயலியை பயன்படுத்தி தனியாா் நிறுவன ஊழியரிடம் கைப்பேசி, பைக்கை பறித்த மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள மேலநரிக்குடி தெற்கு தெர... மேலும் பார்க்க

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை ஒப்படைத்த சிறப்பு எஸ்.ஐ.க்கு பாராட்டு

சாலையில் கண்டெடுத்த தங்க வளையலை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா். சீவலப்பேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஞானவேல் வியாழக்... மேலும் பார்க்க