தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: 14 பேர் காயம்
தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் திங்கள்கிழமை வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 14 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தயாரிக்கும் ஆலையில் பணியாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்குத் தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயமடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SUMMARY
About 14 people suffered injuries in a suspected explosion in a pharma plant in neighbouring Sangareddy district of Telangana on Monday, police said.