செய்திகள் :

தெலங்கானா கெமிக்கல் தொழிற்சாலையில் ரூ.12,000 கோடி போதைபொருள் பறிமுதல்; மும்பை போலீஸார் அதிரடி!

post image

மும்பையில் ஒரு வகை போதைப்பொருள் அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. மும்பை பார்ட்டிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் பிரபலம் ஆகும். கடந்த ஆண்டு இப்போதைப்பொருள் மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மும்பைக்கு சப்ளை செய்யப்பட்டது. ஆனால் அத்தொழிற்சாலைகளுக்கு எதிராக மும்பை போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்ததால் அத்தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டது. ஆனால் அப்போதைப்பொருளின் தேவை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. கடந்த மாதம் மும்பையில் பாத்திமா(23) என்ற பங்களாதேஷ் பெண்ணை ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளுடன் மும்பை மீரா பயந்தர் போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது அப்போதைப்பொருளை தெலங்கானாவில் இருந்து வாங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மும்பையில் இருந்து தனிப்படை போலீஸார் தெலங்கானாவிற்கு சென்றனர்.

கைதானவர்கள்

அவர்கள் செரமாலி என்ற இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து போதைப்பொருள் தயாரிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இக்கண்காணிப்புக்கு பிறகு ஒரே நேரத்தில் 60 இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் தகவல் தொழில் நுட்பத்தில் நிபுணர் ஆவார். அவர் கெமிக்கல் தொழிற்சாலை ஒன்றில் இந்த போதைப்பொருளை தயாரித்து வந்தார்.

ரெய்டு நடத்தப்பட்ட இடத்தில் இருந்து ரூ.12,000 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு போதைப்பொருள் தயாரிக்க தேவைப்படும் 35 ஆயிரம் லிட்டர் ரசாயானமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்தபோது தெலங்கானாவில் தயாரித்து மும்பைக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. கடந்த பல ஆண்டுகளாக இதனை அவர்கள் தயாரித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

பதிப்புரிமை மீறல்: ரூ.12,500 கோடி இழப்பீடு வழங்க, AI நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஆந்த்ரோபிக் நிறுவனம்ஆந்த்ரோபிக் நிறுவனம் பதிப்புரிமை மீறல் வழக்கில் 1.5 பில்லியன் டாலர் இழப்பீடு ஒப்புக்கொண்டதுகணினி மென்பொருள் நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), எழுத்தாளர்களின் பதிப்புரிமை மீறல் வழக... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசப் பெண்களை அச்சுறுத்தும் நிர்வாண கேங்க்: ட்ரோன்கள் மூலம் தேடும் போலீஸார்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகில் உள்ள தெளரலா என்ற கிராமத்துப் பெண்கள் இப்போது அதிர்ச்சியில் இருக்கின்றனர். தனியாகச் செல்லும் பெண்கள் முன்பு திடீரெனத் தோன்றும் நிர்வாண கேங்க் அவர்களை ஆளில்லாத இடத்தி... மேலும் பார்க்க

மான்கள் வேட்டை - விஐபிகளுக்கு விருந்து வைத்தார்களா? - திமுக நிர்வாகியை தீவிரமாக தேடும் வனத்துறை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புள்ளிமான் வேட்டை வழக்கில், திமுகவின் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான டி.எம்.எஸ். முகேஷை வனத்துறையினர், வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவுடன் இணைந்து தமிழ்நாடு மற்ற... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது - பின்னணி என்ன?

4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னையைச் சேர்ந்த வரலட்சுமி என்பவர் சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்தபோது தங்க நகைகள் திருடப்பட்டதாக க... மேலும் பார்க்க

சாத்தூர்: 10-ம் வகுப்பு மாணவி இளைஞருடன் தூக்கிட்டு தற்கொலை - காதல் விவகாரத்தில் விபரீதம்!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக... மேலும் பார்க்க

மும்பை: விநாயகர் சிலை கரைப்புக்கு 25,000 போலீஸார் பாதுகாப்பு; வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

மும்பை போக்குவரத்து காவலர் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் ஆப் எண்ணிற்கு நேற்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் மெசேஜ் வந்தது. அதில் மும்பையில் கணபதி சிலை கரைப்பின் போது தாக்குதல் நடத்த 400 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமரு... மேலும் பார்க்க