செய்திகள் :

தெ.ஆ. டெஸ்ட் பயிற்சியாளர் டி20, ஒருநாள் அணிக்கும் பயிற்சியாளராக நியமனம்!

post image

தெ.ஆ. அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் ஒரே பயிற்சியாளரை நியமித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் 2027 ஐசிசி உலகக் கோப்பை வரைக்கும் டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 அணிகளுக்கும் பயிற்சியாளராகத் தொடர்வார் என சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) தெரிவித்துள்ளது.

சுக்ரி கான்ராட் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக 2023ஆம் ஆண்டு பயிற்சியாளராக தேர்வானார்.

இவரது தலைமையில் தெ.ஆ. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுடன் தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியில் வரும் ஜூன் மாதம் 11ஆம் தேதி மோதவிருக்கிறது.

58 வயதாகும் சுக்ரி கான்ராட் தனது முதல் வெள்ளைப் பந்து பயிற்சியாளராக தெ.ஆ. அணிக்காக வரும் ஜூலையில் ஜிம்பாப்வே உடன் பொறுப்பேற்கிறார்.

டெஸ்ட்டில் சிறப்பாக செயல்பட்டதால் இவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதாகவும் வெள்ளைப் பந்தில் என்ன மாதிரியான மாற்றத்தைக் கொண்டுவருவார் என ஆர்வமாக இருப்பதாகவும் சிஎஸ்ஏவின் இயக்குநர் கூறியுள்ளார்.

கடைசியாக டி20 உலகக் கோப்பையில் தெ.ஆ. அணி இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை த... மேலும் பார்க்க

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என... மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இந்திய மகளிர் பேட்டிங்!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க