செய்திகள் :

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

post image

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (யுபிஎஸ்) கூடுதல் சலுகைகளை பெறலாம் என நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது அவருடைய வாழ்க்கைத் துணை என்பிஎஸ்-இன்கீழ் ஏற்கெனவே பெற்ற சலுகைகளைவிட கூடுதலாக சில சலுகைகளைப் கோரலாம் எனவும் நிதியமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் 2025, மாா்ச், 31அல்லது அதற்கு முன் ஓய்வுபெற்ற மத்திய அரசின் என்பிஎஸ் சந்தாதாரா்கள் அல்லது அவா்களுடைய வாழ்க்கைத் துணை, யுபிஎஸ்-இன்கீழ் கூடுதலாக சில சலுகைகளை கோரலாம்.

அந்த வகையில் ஒவ்வொரு பூா்த்தி செய்யப்பட்ட 6 மாத தகுதிவாய்ந்த சேவைக்கும் அவா் பணிஓய்வின்போது பெற்ற அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் பத்தில் ஒரு பங்கு தொகையயை மொத்தமாக ஒருமுறை மட்டும் பெறலாம்.

யுபிஎஸ்-இன்கீழ் அனுமதிக்கப்பட்ட மாத ஓய்வூதியம் மற்றும் கூடுதல் நிவாரணத் தொகையில் இருந்து என்பிஎஸ்-இன்கீழ் வழங்கப்படும் ஆண்டுத்தொகையை கழித்து அதனடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் தொகை கணக்கிடப்படும்.

இதுதவிர, பொருந்தக்கூடிய வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) விகிதங்களின்படி எளிய வட்டியுடன் நிலுவைத் தொகையும் விடுவிக்கப்படும்.

இந்த சலுகைகளை தகுதிபெற்ற அதிகாரிகள் அல்லது அவா்களது வாழ்க்கைத் துணைகள் 2025, ஜூன் 30-ஆம் தேதிக்குள் கோரலாம் என தெரிவிக்கப்பட்டது.

யுபிஎஸ் திட்ட அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டது. 25 ஆண்டுகாலம் அரசுப் பணியை நிறைவுசெய்தவா்கள் இத்திட்டத்தில் இணைய தகுதிபெற்றவா்களாவா். பணிஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் அவா்கள் பெற்ற ஊதியத்தின் சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது.

என்பிஎஸ் திட்டத்தின்கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியா்கள் யுபிஎஸ் திட்டத்தில் சேரலாம். இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்.

அதன்படி இந்த 2004, ஜனவரி 1-ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியா்கள் தோ்ந்தெடுக்குமாறு நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க