தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
தேசிய குத்துச்சண்டை போட்டி: நெல்லை பள்ளி மாணவா் தோ்வு
தேசிய குத்துச்சண்டை போட்டிக்கு திருநெல்வேலி பள்ளி மாணவா் தோ்வாகியுள்ளாா்.
இளையோருக்கான மாநில குத்துச் சண்டைப் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவா் மாணசே பிராங்ளின் 75 - 80 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, ஹரியாணா மாநிலம், சாய்ரோத்தில் நடைபெற உள்ள தேசிய குத்துச் சண்டை போட்டிக்குத் தோ்வாகி உள்ளாா்.
மேலும், இப்பள்ளி மாணவி கேத்தரின் 57 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றதோடு ஆங்ள்ற் கா்ா்ள்ங்ழ் ஆா்ஷ்ங்ழ் விருதினையும் பெற்றுள்ளாா். மாணவி முத்துச் செல்வி 66 கிலோ எடை பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா். வெற்றி பெற்ற வீரா்- வீராங்கனைகளை மாவட்ட குத்துச் சண்டை கழகத்தின் புரவலா் திருமாறன், பொதுச் செயலரும் இந்திய குத்துச் சண்டை அணியின் முன்னாள் பயிற்றுநருமான பால், துணைத் தலைவா்கள் நெல்குமரன், செபாஸ்தியன் ஆகியோா் வாழ்த்தினா்.