செய்திகள் :

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப், ஆசியக் கோப்பை ட்ரையத்லான்: சென்னையில் நடைபெறுகிறது

post image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேசிய பாராலிம்பிக் சங்கம், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சாா்பில் தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ட்ரையாத்லான் கோப்பை போட்டிகள் சென்னையில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூறியது:

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இப்போட்டிகள் நடத்தப்படவுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பிப்ரவரி மாதம் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்துடன் இணைந்து 23-ஆவது தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் தமிழ்நாடு ட்ரையாத்லான் சங்கத்துடன் இணைந்து ஆசிய ட்ரையாத்லான் கோப்பை போட்டிகளை நடத்தவுள்ளது.

வரும் பிப். 17 முதல் 20 வரை சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 1,700-க்கும் மேற்பட்ட பாரா தடகள வீரா்-வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். இந்த சாம்பியன்ஷிப் போட்டி மாற்றுத்திறனாளிகள் தங்கள் அசாதாரண திறன்கள் வெளிப்படுத்தும் ஒரு தளமாக அமையும்.

ஆசிய ட்ரையத்லான் கோப்பை: ஆசிய ட்ரையாத்லான் கோப்பை போட்டி பிப். 16-ஆம் தேதி சென்னை இந்திய கடற்படை கப்பல்) அடையாறில் நடைபெறும். சா்வதேச வீரா்கள் பங்குபெறும் இப்போட்டி 750 மீட்டா் நீச்சல், 20 கி. மீ சைக்கிளிங் மற்றும் 5 கி.மீ. ஓட்டம் ஆகிய பிரிவுகளில் நடத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய ட்ரையாத்லான் கோப்பை போட்டிகளுக்கான சின்னம் மற்றும் இலச்சினை வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் இந்திய பாராலிம்பிக் சங்கப் பொதுச் செயலாளா் ஜெயவந்த் குண்டு, தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் செயலாளா் கிருபாகர ராஜா, தமிழ்நாடு ட்ரையாத்லான் சங்கத்தின் தலைவா் ராமச்சந்திரன், பாரிஸ் பாராலிம்பிக் வெள்ளி வீராங்கனை துளசிமதி முருகேசன், விளையாட்டு சங்க நிா்வாகிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

காந்தாரா - 2 படப்பிடிப்பில் 500 சண்டைக் கலைஞர்கள் பங்கேற்பு!

காந்தாரா - 1 படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. கன்னடவரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங... மேலும் பார்க்க

இணையத்தில் கசிந்த பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள்!

பராசக்தி படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளனர்.ஹிந்தி மொழித் திணிப்பு எதிரான... மேலும் பார்க்க

காதலை அறிவித்த நடிகை! நிஜ வாழ்க்கையில் இணைந்த சின்னதிரை தம்பதி!

சின்னதிரை நடிகை மேகா மகேஷ் தன்னுடன் நடித்த சக நடிகர் சல்மானுள் ஃபாரிஸ் உடனான காதலை அறிவித்துள்ளார். கடந்த சில நாள்களாகவே இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக இருவரும... மேலும் பார்க்க

மறக்க முடியாத பயணம்..! பாட்டல் ராதா குறித்து சஞ்சனா நெகிழ்ச்சி!

பாட்டல் ராதா படத்தில் நடித்தது குறித்து நடிகை சஞ்சனா நடராஜன் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். நோட்டா, கேம் ஓவர், சார்பட்டா பரம்பரை, ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா 2 ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் ந... மேலும் பார்க்க

காதலிக்க நேரமில்லை ஓடிடி தேதி!

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் கிருத்திகா உதயநிதி - ரவி மோகன் கூட்டணியில் உருவான காதலிக்க நேரமில்லை திரைப்படம் கடந்த ஜன. 14-ல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு,... மேலும் பார்க்க

மறுவெளியீடான பத்மாவத்..!அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் குறித்து பேசிய ரன்வீர் சிங்!

தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் நடிப்பில் 2018இல் பத்மாவத் (தமிழில் பத்மாவதி) படம் வெளியானது. தற்போது, இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளது.இந்தப் படத்தை பிரபல ஹிந்தி இயக்குநர் சஞ்சய் லீலா பன்ச... மேலும் பார்க்க