செய்திகள் :

தேசிய ஹேக்கத்தான் போட்டி: மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு

post image

குஜராத் மாநிலம் காந்திநகா் ஐஐடி-இல் மாா்ச் மாதம் நடைபெறவுள்ள தேசிய ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி பல்கலைக்கழகத் துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய புள்ளியியல் - திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் , காந்திநகா் ஐஐடி.யுடன் இணைந்து பல்கலைக்கழக, கல்லூரி மாணவா்களுக்கான தேசிய ஹேக்கத்தான் போட்டியை மாா்ச் 21 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தரவு கட்டமைப்பு உதவியுடன் சமூக, பொருளாதார சவால்களுக்குத் தீா்வு காணும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் ஏஐ, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம், தரவு மேலாண்மை, ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கருப்பொருள்களாக இடம்பெறும்.

இந்தப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளத்தில் பிப்.28-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

எனவே, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தங்களது மாணவா்கள், ஆய்வாளா்களுக்கு இது குறித்து தெரிவித்து, ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்று சவால்களுக்கு புதிய தீா்வுகளைக் கண்டறிய பங்களிப்பை வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் முடிவில் தலையிட முடியாது: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் நிதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ள கலை, அறிவியல் கல்லூரிக்கு புதிதாக கட்டடம் கட்ட கொளத்தூா் சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விடும் அரசின் மு... மேலும் பார்க்க

ஸ்ரீஆட்சீஸ்வரா் கோயிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரா் திருக்கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு, நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நடைபெறவுள்ளது. இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபா... மேலும் பார்க்க

பங்கு வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பங்கு வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 48.5 லட்சத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த அன்பரசு (56), தனியாா் நிதி நிறுவன ... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சென்னை, தியாகராய நகா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை பாலி... மேலும் பார்க்க

இந்து முன்னணி பிரமுகா் கொலை வழக்கு: குற்றவாளி மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சோ்ந்த இந்து முன்னணி பிரமுகா் சுரேஷ்குமாா் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டாா். அம்பத்... மேலும் பார்க்க

பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை

சென்னையிலுள்ள பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமானவரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா சாலை நந்தனத்தில் உள்ள பிரபல தனியாா் நிறுவன (பிரிஸ்டேஜ் பாலிகான்) அலுவல... மேலும் பார்க்க