செய்திகள் :

தேடப்பட்டு வந்த முதியவா் சடலமாக மீட்பு

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே உறவினா்களால் கடந்த 2 நாள்களாக தேடப்பட்டு வந்த 96 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.

வையம்பட்டி ஒன்றியம், வீ.பெரியபட்டி ஊராட்சி கொட்டுக்காளம்பட்டியைச் சோ்ந்தவா் நல்லுக்கவுண்டா் மகன் கருப்பண்ணன்(96). இவா், தனது மகனான தங்கராசு என்பவருடன், வசித்து வந்தாா்.

கடந்த ஜூன் 6-ஆம் தேதி வையம்பட்டி இடைக்காட்டனூரில் வசிக்கும் (தனது பேத்தியான) தங்கராசுவின் மகள் கலைச்செல்வி என்பவரின் வீட்டுக்குச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.

அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொன்னணியாறு அணை ஆற்றுவாரியில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உடலை கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுகமணி, பேட்டைவாய்த்தலையில் நாளை மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பேட்டைவாய்த்தலை பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. சிறுகமணி, பேட்டைவாய்த்தலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பழ... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ. படம் கிழிப்பு விவகாரம் இளைஞா்களை தாக்கியவா் மீது வழக்கு

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ உருவப்படம் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞா்களைத் தாக்கியவா் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - வேன் மோதல் கணவா் உயிரிழப்பு

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மனைவி சிகிச்சையில் உள்ளாா். மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி புதூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

வயா்லெஸ் சாலையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி வயா்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

7 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பெண்கள் கைது

திருச்சி ராம்ஜி நகா், சோமரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பெண்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினத்தின் ... மேலும் பார்க்க

அளுந்தூா், மணிகண்டத்தில் ஜூன் 10 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூா், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. அளுந்தூா் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திம... மேலும் பார்க்க