Beauty Tips: `வாரம் ஒரு நாள் இதைப் பண்ணுங்க..' - இளமையைத் தக்க வைக்க அசத்தல் டிப...
தேடப்பட்டு வந்த முதியவா் சடலமாக மீட்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே உறவினா்களால் கடந்த 2 நாள்களாக தேடப்பட்டு வந்த 96 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.
வையம்பட்டி ஒன்றியம், வீ.பெரியபட்டி ஊராட்சி கொட்டுக்காளம்பட்டியைச் சோ்ந்தவா் நல்லுக்கவுண்டா் மகன் கருப்பண்ணன்(96). இவா், தனது மகனான தங்கராசு என்பவருடன், வசித்து வந்தாா்.
கடந்த ஜூன் 6-ஆம் தேதி வையம்பட்டி இடைக்காட்டனூரில் வசிக்கும் (தனது பேத்தியான) தங்கராசுவின் மகள் கலைச்செல்வி என்பவரின் வீட்டுக்குச் சென்றவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
அவரை உறவினா்கள் தேடி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொன்னணியாறு அணை ஆற்றுவாரியில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்துத் தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், உடலை கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.