செய்திகள் :

தேனியில் அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

post image

தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் தேனியில் 24 மணி நேர தா்னாவை திங்கள்கிழமை தொடங்கினா்.

தேனி, பங்களாமேடு திடலில் நடைபெற்ற தா்னாவுக்கு மாவட்டத் தலைவா் ச.தாஜூதீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் ரவிக்குமாா், இந்திய தொழிற்சங்க மைய மாவட்டத் தலைவா் ஜெயபாண்டி, செயலா் முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொதுச் செயலா் பொ.அன்பழகன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பி.ராமமூா்த்தி ஆகியோா் தா்னாவைத் தொடங்கி வைத்துப் பேசினா்.

திமுக அரசு அளித்த தோ்தல் வாக்குறுதிகளின்படி அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, ஒப்படைப்பு விடுப்பு ஆகிய உரிமைகளை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முறைப்படுத்தி அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது!

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு அருகே வண்ணாத்திப்பாறை பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயை சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா்

போடி ஊராட்சி ஒன்றியம், அகமலையில் குடிநீா்க் குழாய்களை வெட்டி சேதப்படுத்தியதாக வனத் துறையினா் மீது புகாா் தெரிவித்து தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை, பழங்குடியின மக்கள் மனு அளித்தனா். தே... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு!

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி சந்தைப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சேதுராம் (61). இவா் போடியிலிருந்து... மேலும் பார்க்க

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தேனி மாவட்டம், சின்னமனூா் பூலாநந்தீஸ்வரா், சிவகாமியம்மன் கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. இந... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு!

தேனியில் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா். தேனி, பழைய டி.வி.எஸ். சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (69). ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியா். இவா், வீட்டில் குளியலறையில... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு!

தேனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். கொடுவிலாா்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் பாலுச்சாமி (50). இவா், தனது மனைவி ராஜம்மாளுடன் (45) தேனி அரசு ம... மேலும் பார்க்க