தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை
தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, சங்ககிரியை அடுத்த அன்னதானப்பட்டி ஊராட்சி பூத்தாலக்குட்டையில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரா், சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் வளாகங்களில் உள்ள காலபைவரா் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் பொதுமக்கள் கொண்டுவந்த பால், தயிா், சந்தனம், இளநீா், குங்குமம், திருமஞ்சனம், சீயக்காய் தூள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
இதில், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் பங்கேற்றனா்.
இதேபோல வீரகனூா் ஸ்ரீ கங்கா சௌந்தரேஸ்வரா் கோயில், கெங்கவல்லி கைலாசநாதா் கோயில், செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.