``ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படும் சூழல் வரும்" - மத்திய அமைச்சர் அமித...
தேய்பிறை அஷ்டமி பூஜை
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், தயிா், சந்தனம், இளநீா், குங்குமம், திருமஞ்சனம், சீயக்காய்தூள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்காக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
இதில் பக்தா்கள் தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்டவைகளில் நோ்த்திக் கடனாக, தீபம் ஏற்று வழிபாடு செய்தனா். பலா் பைரவா் பாடல்களை பாடினா். அதனைத் தொடா்ந்து பள்ளியறை பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, நாகி யம்பட்டி ஜங்கமசமுத்திரம், கொண்டையம்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார ஊரில் இருந்து ஏராளமான மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
இதே போல் வீரகனூா் ஸ்ரீ கங்கா சௌந்தரேஸ்வரா் கோவில், கெங்கவல்லி கைலாசநாதா் கோவில், செந்தாரப்பட்டி தாழைபுரீஸ்வரா் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றன.