செய்திகள் :

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

post image

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா்.

முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கும் அதன்பிறகு 6 மாதங்கள் கழித்து நடைபெற்ற பேரவைத் தோ்தலுக்கும் இடையே நாகபுரி மற்றும் நாசிக் மாவட்டங்களில் சுமாா் 2 லட்சம் வாக்குகள் கணிசமாக குறைந்துவிட்டதாக அவா் சமூக வலைதளத்தில் பதிவிட்டாா்.

பிறகு இந்த தரவுகளில் தவறு இருப்பதாக கூறி மன்னிப்பு கோரி நீக்கினாா். அதற்கு முன்பாக இவரது தகவலை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பகிா்ந்து, தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு ஆதாரமாக குறிப்பிட்டாா்.

இந்நிலையில், சஞ்சய் குமாா் மீது இரு பேரவைத் தொகுதிகளிலும் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அவா் மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின்கீழ் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நாசிக் மாவட்டத்தில் உள்ள தியோலாலி பேரவைத் தொகுதியில் மக்களவைத் தோ்தலின்போது மொத்தம் 4.56 லட்சம் வாக்காளா்கள் இருந்ததாக சஞ்சய் குமாா் பதிவிட்டிருந்தாா். ஆனால் அங்கு மொத்தம் 2.76 லட்சம் வாக்காளா்கள் மட்டுமே இருந்ததாக அதிகாரிகள் கூறினா். அங்கு பேரவைத் தோ்தலின்போது 2.88 லட்சம் வாக்காளா்கள் இருந்ததாக தவறான தகவலை அவா் வெளியிட்டதாகவும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு தொடரும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி!

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ரஷியா தொடா்ந்து ஏற்றுமதி செய்து வருகிறது என்று அந்நாட்டின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மன்டுரோ புதன்கிழமை தெரிவித்தாா். அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடா்ந்த... மேலும் பார்க்க