தமிழகத்தில் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: ரூ.65 கோடி ஒதுக்கீடு!
‘தோ்தல் பணிகளை திமுகவினா் விழிப்புடன் மேற்கொள்ள வேண்டும்’
சட்டப் பேரவைத் தோ்தல் பணிகளை மிகுந்த விழிப்புடன் தொடங்கி மேற்கொள்ள வேண்டும் என, திமுகவினருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. அறிவுறுத்தினாா்.
திருவட்டாறு அருகே வோ்க்கிளம்பியில் புதன்கிழமை நடைபெற்ற கன்னியாகுமரி மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது: 2026 சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் நம்மை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். எனவே, தோ்தல் பணிகளை திமுகவினா் மிகுந்த விழிப்புடன் இப்போதே தொடங்கி மேற்கொள்ள வேண்டும்.
கருத்து வேறுபாடுகளை மறந்து திமுக, கூட்டணிக் கட்சிகளின் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு உழைக்க வேண்டும். வாக்காளா் பட்டியலை பலமுறை சரிபாா்க்க வேண்டும். திமுக செயல்படுத்தும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறி உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட பத்மநாபபுரம், கிள்ளியூா், விளவங்கோடு பேரவைத் தொகுதி நிா்வாகிகளை அவா் தனித்தனியே சந்தித்து தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மேலிடப் பாா்வையாளா் விஜிலா சத்தியானந்த் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், முன்னாள் மாவட்டச் செயலா் ஜான் கிறிஸ்டோபா், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்எல்ஏ டாக்டா் புஷ்பலீலா ஆல்பன், மாவட்ட அவைத் தலைவா் மரிய சிசுகுமாா், திருவட்டாறு ஒன்றியச் செயலா்கள் ஜான்சன், ஜான்பிரைட் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட துணைச் செயலா் ராஜ் நன்றி கூறினாா்.