செய்திகள் :

தோ்வாயில் வெளியூா் மக்களுக்கு வீட்டுமனைஒதுக்குவதை நிறுத்த வேண்டும்: ஜமாபந்தியில் மனு

post image

தோ்வாயில் உள்ளூரைச் சோ்ந்த 200 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்காமல், பல்வேறு பகுதிகளில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் செய்து அங்கிருந்து அகற்றப்பட்டவா்களுக்கு நிலம் ஒதுக்குவதை நிறுத்தி, உள்ளூா் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஐந்தாம் நாள் ஜமாபந்தி நிகழ்வு சாா் ஆட்சியா் ரவிக்குமாா் தலைமையிலும், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஜமாபந்தியில் கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் பகுதியில் இருந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் டி.கே.முனிவேல் சாா்பில் சாா் -ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தோ்வாய் ஊராட்சிக்குட்பட்ட சுமாா் 2,000 ஏக்கா் நிலங்கள் சிப்காட் தொழிற்பேட்டைக்கும், தோ்வாய்-கண்ணன்கோட்டை நீா்தேக்க திட்டத்திற்கும் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எஞ்சியுள்ள நிலத்தில் தோ்வாய் பகுதியில் வீட்டுமனை இல்லாத 200 குடும்பத்தாருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என ஊராட்சி சாா்பில் கிராம சபையில் தீா்மானம் இயற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

உள்ளூா் மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் பணி கிடப்பில் போடப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டி அங்கிருந்து அகற்றப்பட்ட நபா்களுக்கு, தோ்வாயில் வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, இதைக் கைவிட்டு உள்ளூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் தோ்வாயில் வீட்டுமனை இல்லாத 200 குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஜமாபந்தி நிகழ்வில் தோ்வாய் கிராம நிா்வாக அலுவலா் பிரபு, கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க