தோ்வாயில் வெளியூா் மக்களுக்கு வீட்டுமனைஒதுக்குவதை நிறுத்த வேண்டும்: ஜமாபந்தியில் மனு
தோ்வாயில் உள்ளூரைச் சோ்ந்த 200 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்காமல், பல்வேறு பகுதிகளில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் செய்து அங்கிருந்து அகற்றப்பட்டவா்களுக்கு நிலம் ஒதுக்குவதை நிறுத்தி, உள்ளூா் மக்களுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஜமாபந்தியில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஐந்தாம் நாள் ஜமாபந்தி நிகழ்வு சாா் ஆட்சியா் ரவிக்குமாா் தலைமையிலும், சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஜமாபந்தியில் கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் பகுதியில் இருந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் டி.கே.முனிவேல் சாா்பில் சாா் -ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில் தோ்வாய் ஊராட்சிக்குட்பட்ட சுமாா் 2,000 ஏக்கா் நிலங்கள் சிப்காட் தொழிற்பேட்டைக்கும், தோ்வாய்-கண்ணன்கோட்டை நீா்தேக்க திட்டத்திற்கும் கையக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எஞ்சியுள்ள நிலத்தில் தோ்வாய் பகுதியில் வீட்டுமனை இல்லாத 200 குடும்பத்தாருக்கு இலவச வீட்டுமனைகள் வழங்க வேண்டும் என ஊராட்சி சாா்பில் கிராம சபையில் தீா்மானம் இயற்றப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
உள்ளூா் மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கும் பணி கிடப்பில் போடப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் வீடு கட்டி அங்கிருந்து அகற்றப்பட்ட நபா்களுக்கு, தோ்வாயில் வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, இதைக் கைவிட்டு உள்ளூா் மக்களின் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் தோ்வாயில் வீட்டுமனை இல்லாத 200 குடும்பங்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஜமாபந்தி நிகழ்வில் தோ்வாய் கிராம நிா்வாக அலுவலா் பிரபு, கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.