செய்திகள் :

தைப்பூசம்: தாடிக்கொம்பு பழநி ஆண்டவர் கோயில் தேரோட்டம் - ஆரோகரா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்

post image
திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமையான தாடிக்கொம்பு பழநி ஆண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகுவிமர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பழநி ஆண்டவருக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
தாடிக்கொம்பு பழநியாண்டவர்

இக்கோயிலில் புதிதாக உற்சவர் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து உற்சவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

இதையடுத்து தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. தேரோட்டம் தாடிக்கொம்பின் தேரோடும் 4 வீதிகள் வழியாக உலா வந்து கோவிலுக்கு வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட ஏராளமான முருக பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது எழுப்பிய அரோகரா கோஷம் அப்பகுதியை அதிரச்செய்தது.

தேரோட்ட நிகழ்வு

இந்தத் தேரோட்டத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோயில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தைப்பூசம்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு; பழனி தைப்பூசத் திருவிழா | Photo Album

பழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூச திருவிழாபழனி தைப்பூ... மேலும் பார்க்க

சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: 17 ஆண்டுகளுக்குப் பின் கோலாகலம்; குவிந்த பக்தர்கள்

தேனி மாவட்டம் சின்னமனூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் கட்டுமானத்துக்குச் சிவப்பு நிற பாறைகள் பயன்பட... மேலும் பார்க்க

``பல தலைமுறைகளாக இந்த பந்தம்..." -புன்னை நல்லூர் மாரியம்மனுக்கு சீர்வரிசை அளித்த இஸ்லாமியர்கள்!

தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. புன்னை மரக்காட்டில் மூலஸ்தான மகமாயியான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானதாக ஐதீகம். இதனால் மூலஸ... மேலும் பார்க்க

தைப்பூசம்: பழநிக்கு படையெடுக்கும் முருக பக்தர்கள்... இன்று திருக்கல்யாணம்; நாளை தேரோட்டம்..!

தமிழகத்தில் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்று மூன்றாம்படை வீடான பழநி முருகன் கோயில். இங்கு ஆண்தோறும் தைப்பூசம் விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம். இதையொட்டி பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்... மேலும் பார்க்க

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா -நேர்த்திக்கடனை நிறைவேற்றிய பக்தர்கள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்றது. இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். குறிப்பாக ... மேலும் பார்க்க

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்

தோரணமலை தைப்பூசம்: உங்கள் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றி வைக்கும் முருக வழிபாடு! சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள்... மேலும் பார்க்க