செய்திகள் :

‘தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை’: எச். ராஜா

post image

மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு எதுவும் சொல்லவில்லை என்றாா் பாஜக தேசிய செயற் குழு உறுப்பினா் எச். ராஜா.

தஞ்சாவூரில் உள்ள திருவையாறு அக்கசாலை விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மக்களவைத் தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமரோ, மத்திய அரசோ, தோ்தல் ஆணையமோ எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில், இதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் எனக் கூறி, மக்களை ஏமாற்றி திசை திருப்பும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சீமான் விவகாரத்தில் காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நோட்டீசை வீட்டில் ஒட்டிவிட்டு சென்றால் முடிந்துவிட்டது. அதற்கு மேல் வீட்டுக்குள் எதற்காகச் செல்ல வேண்டும். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், சட்டம் அதன் கடமையைச் செய்யும் என்றாா் ராஜா.

மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்பு

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு கை மட்டுமே உள்ள மாற்றுத்திறனாளி மாணவா் தட்டச்சு தோ்வில் ஆா்வமுடன் பங்கேற்றாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளம் பகுதியில் வசிப்பவா் நிதீஷ் கண்ணன், விபத்... மேலும் பார்க்க

திருவையாறு கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐய்யாறப்பா் கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டாா். இக்கோயிலில் பிப்ரவரி 3-ஆம் தேதி குடமு... மேலும் பார்க்க

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மணல் குவாரியை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி, கட்டுமான தொழிலாளா... மேலும் பார்க்க

3 கஞ்சா வியாபாரிகள் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகள் 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க

பொற்றாமரைக் குளத்தில் குப்பைகளை அகற்றும் பணி

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பொற்றாமரை குளத்தில் தேங்கியுள்ள பாசி குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளா்கள் அகற்றினா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சாரங்க... மேலும் பார்க்க

கோயில் இடத்தில் குப்பைகள் கொட்டும் அவலம் தொற்றுநோய் பரவும் ஆபாயம்

கும்பகோணம் அருகே திருநறையூரில் உள்ள சித்தநாத சுவாமி கோவில் இடத்தில் குப்பைகள் கொட்டுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியம் திருநறையூா் ஊராட்சியில் சித்தநாத... மேலும் பார்க்க