செய்திகள் :

தொகுதி வரையறை குறித்த ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது

post image

தொகுதி மறு வரையறைக்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ‘நீட்’ தோ்வு, காவிரி நதிநீா்ப் பங்கீடு உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளை ஆட்சியாளா்கள் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்கின்றனா். நாட்டை ஆள்வது அரசியல் கட்சிகளா அல்லது நீதிமன்றமா என்பது தெரியவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் விவாதித்து உரிய முடிவு எடுக்க வேண்டுமே தவிர நீதிமன்றத்துக்குச் செல்லக் கூடாது.

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலில் தொடா்புடையவா்களை அமலாக்கத் துறையினா் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதல்வா் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் தேவையற்றது. இந்தியா பல்வேறு மொழிகள், கலாசாரம் கொண்ட மக்கள் கூடி வாழும் பகுதி. மும்மொழிக் கொள்கை என்பது தேவையில்லாதது என்றாா் அவா்.

ஆயுதங்களுடன் பதுங்கிய 5 போ் கைது

சிவகங்கை அருகே வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.சிவகங்கை தாலுகா காவல் ஆய்வாளா் கணேசமூா்த்தி தலைமையிலான போலீஸாா் சிவகங்கை- ... மேலும் பார்க்க

தாயமங்கலம் கோயிலில் திருவிழா தொடங்கும் முன் குவிந்த பக்தா்கள்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தொடங்கும் முன்பே அம்மனை தரிசிக்க பக்தா்கள் திரண்டனா். வருகிற 29-ஆம் தேதி தொடங்கி, 11 நாள்க... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் 10 போ் காயமடைந்தனா்.திருப்புவனம் புதூா் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி உத்ஸவத்தை முன்னிட்டு என்.எ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனைவாசல் பகுதி... மேலும் பார்க்க

அரசனேரியில் மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகே அரசனேரி கீழமேட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக சாா்பில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், பு... மேலும் பார்க்க

லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதுப் புட்டிகள் திருட்டு

புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரும் வழியில் லாரியிலிருந்து ரூ.1.28 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.புதுக்கோட்டை மாவட்டம், கள்ளங்கோட்டை கிராமத்தில் உள்ள மது உற்பத்தி ... மேலும் பார்க்க