செய்திகள் :

`தொடர் மணல் கடத்தல்' - 5 லாரிகள் பறிமுதல், 6 பேர் கைது! - கரூரில் நடந்தது என்ன?

post image

கரூர் அருகே உள்ள வெள்ளியணை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் இருக்கிறது உப்பிடமங்கலம். இந்த பேரூராட்சியில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் ரோடு அருகே தயாநிதி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நவலடி மணல் சலிப்பகத்தில் சட்ட விரோதமாக கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து ஆற்று மணலை கடத்தி வந்து விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவல் அடிப்படையில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர் முத்துக்குமார், வெள்ளியணை காவல் உதவி ஆய்வாளர் ரூபினி மற்றும் தனிப்படையினர் மேற்படி இடத்தில் சோதனை செய்த போது, அங்கிருந்த 5 லாரிகளில், 3 லாரியில் 9 யூனிட் மணலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

மணல் கடத்தல்

அப்போது, மணல் சலிப்பகத்தில் திடீர் சோதனை நடைபெற்றது. போலீஸாரின் விசாரணையில், திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், பிரகாஷ், பாரதி, சதீஷ்குமார் என்கிற சோடா சதீஷ், மற்றும் ஸ்ரீ நவலடி மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி உள்ளிட்டோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மாயனூர் பிரசன்னா என்ற லாரி உரிமையாளர் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை மற்றும் வீரராக்கியம் பகுதிகளில் இருந்து மாட்டு வண்டிகள் மற்றும் பிக்கப் வாகனங்களில் இருந்து மணலை சலிப்பகத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்து லாரிகளில் சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி | கைது

அதனை தொடர்ந்து, மேற்படி 5 நபர்களை கைது செய்தும், மணலுடன் இருந்த லாரிகள் மற்றும் காலியாக இருந்த லாரிகளையும் போலீஸார் கைப்பற்றினர். தலைமுறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்.

இதில் தலைமறைவாக உள்ள பிரசன்னா என்பவர் மீது மணல் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 வழக்குகளும், கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலையத்தில் 1 வழக்கும், புல்பேண்ட் சதீஸ்குமார் என்பவருக்கு திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், நவலடி மணல் சலிப்பக உரிமையாளர் தயாநிதி என்பவர் மீது வெள்ளியணை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம், கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வந்தே பாரத் ரயில்: பாஜக எம்எல்ஏ-க்கு சீட் கொடுக்க மறுத்தவர் மீது தாக்குதல்.. உ.பி.,யில் அதிர்ச்சி

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் குறுகிய தூரத்திற்குள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே இருக்கிறது. அடுத்த கட்டமாக படுக்கை வசதியுடன் கூடிய வந்தே ... மேலும் பார்க்க

``நீட் மதிப்பெண் குறைந்து விட்டது'' - மகளை அடித்தே கொன்ற ஆசிரியர்.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா சாங்கிலி மாவட்டத்தில் உள்ள நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்... மேலும் பார்க்க

ஜெகன் மோகன் ரெட்டி கார் டயரில் சிக்கி உயிரிழந்த தொண்டர் - என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

கடந்த ஜூன் 18-ம் தேதி, ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ரெண்டபல்லா எனும் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு, தற்கொலை செய்துகொண்ட தன் கட்சி தலைவர் ஒருவரின் குடும்பத்தை ... மேலும் பார்க்க

ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண்; அவமானப்படுத்திய கும்பல்? - விபரீத முடிவெடுத்த பெண்

கேரள மாநிலம் கண்ணூர் காயலோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஷீதா(40). இவர் கடந்த 17-ம் தேதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலின்பேரில் அங்குசென்ற பினராயி காவல்நிலை... மேலும் பார்க்க

மும்பை: ஓடும் காரில் பெண் விமானிக்குப் பாலியல் தொல்லை தந்த இருவர்; டாக்சி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

மும்பையின் தென்பகுதியில் உள்ள போர்ட் பகுதியிலிருந்து 28 வயது பெண் பைலட் கிழக்கு புறநகரில் உள்ள தனது வீட்டிற்கு இரவு டாக்சி ஏற்பாடு செய்து சென்று கொண்டிருந்தார்.இரவு 11 மணியாகிவிட்ட நிலையில் டாக்சி வழக... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் கு... மேலும் பார்க்க