செய்திகள் :

தொடர் விடுமுறை!கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

post image

தொடர் விடுமுறை காரணமாக, கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதால், நகரமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

கொடைக்கானல் அரசுப் பள்ளி வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்களின் படையெடுப்பால் கொடைக்கானல் நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது.

கடந்த மே மாதம் கோடைப் பருவம் முடிந்த பின் 3 மாதங்களுக்குப் பின் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.

சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்கள் ஒன்றாக வந்ததால், தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்றுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்று முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்தனர். இன்று காலை அனைத்து இடங்களிலும் நீண்ட வரிசைகளில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

குறிப்பாக கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளான மன்னவனூா் சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, பூம்பாறை இயற்கை எழில்காட்சி, குழந்தை வேலப்பா் கோயில், கூக்கால் ஏரி, புலவச்சாறு அருவி, பெப்பா் அருவி, வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட பல்வேறு இடங்களைப் பாா்த்தும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்து வருகிறார்கரள்.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏரிச் சாலை, கோக்கா்ஸ் வாக், பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

20 உயா்நிலைப் பள்ளிகள் தரம் உயா்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம்... மேலும் பார்க்க

பாஜகவின் கிளை அமைப்பாக மாறிய தேர்தல் ஆணையம்- முதல்வர் ஸ்டாலின்

சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் அவர் பேசுகையில், சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக விரை... மேலும் பார்க்க

ஏற்காட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகள்!

தொடர் விடுமுறையைக் கொண்டாட சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப் பிரதேசத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில்... மேலும் பார்க்க

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகமெங்கிலும் கிருஷ்ண ஜெயந்தி நாளான இன்று(ஆக. 16) பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இரவு 10 மணி வரை ராணிப்பேட்டைதிருவண்ணாமலைவிழுப்புரம்காஞ்சிபுரம்செங்கல்பட்டுநீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னன... மேலும் பார்க்க

அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு

சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவ... மேலும் பார்க்க

அதிமுக அலங்கார வளைவு சரிந்து விபத்து: நூலிழையில் தப்பிய இபிஎஸ்

செங்கத்தில் அதிமுக அலங்கார வளைவு விழுந்ததில் அந்த வழியாக சென்ற அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நூலிழையில் தப்பினார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க