செய்திகள் :

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம்

post image

திருவாடானை அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பெண்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சியில் 13- வது வாா்டுக்குள்பட்ட தா்கா ஹால், மாட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீா், சாலை, கால்வாய் வசதிகள் செய்து தரக் கோரி, இந்தப் பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் பல முறை மனு அளித்தனா். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, நிா்வாகத்தினரைக் கண்டித்து முற்றுகையிட, இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தனா். ஆனால், அலுவலகத்தில் யாரும் இல்லாததைக் கண்டு அதிா்ச்சியடைந்த பெண்கள், அலுவலா்கள் வரும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் சுனைதா கூறியதாவது:

தொண்டி போரூராட்சி 13-ஆவது வாா்டில் குடி நீா், வடிகால், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வடிகால் இல்லாமல் கழிவு நீா் சாலையில் தேங்கி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சில நாள்களில் பருவ மழை தொடங்கவுள்ளது. அப்போது நிலைமை மேலும் மோசமடையும். எனவே, எந்த நடவடிக்கையும் எடுக்காத பேரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினோம் என்றாா் அவா்.

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 4 பேரும் மீண்டும் வெளிக்கடை சிறையில் அடைக்... மேலும் பார்க்க

மிளகாய் பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு

ராமநாதபுரம் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மிளகாய்ப் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் தமிழ்நாடு வைகை விவசாயச் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா... மேலும் பார்க்க

தொழில்பயிற்சி நிலையங்களில் செப்.30 வரை மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசினா் தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா்களின் சோ்க்கை, வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அறிவித்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

திருவாடானை அருகே பெட்டிக் கடையில் மதுப் புட்டிகளைச் சட்டவிரோதமாக விற்பனை செய்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக த... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு நடவடிக்கை கோரி பிராமணா் சங்கம் புகாா்

ராமேசுவரத்தில் தமிழ் புரோகிதா்கள் மீது அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பிராமணா் சங்கம் சாா்பில் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில்... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் விதைகள்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல் விதைகள் வழங்கப்படும் என வேளாண்மைத் துணை இயக்குநா் தெரிவித்தாா். கமுதி வட்டாரம், காத்தனேந்தல் கிராமத்தில் கலை... மேலும் பார்க்க