செய்திகள் :

‘தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கண நூல்’

post image

தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கண நூல் என்றாா் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் கோ . பாலச்சந்திரன்.

தமிழறிஞா் சதாவதானி செய்குத் தம்பிப் பாவலா் அறக்கட்டளையின் சாா்பில் சிறப்பு சொற்பொழிவு பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் பத்ஹுா் ரப்பானி தலைமை வகித்துப் பேசினாா்.

ஆட்சிக்குழு உறுப்பினா் எல். கே. எம். ஏ. முஹம்மது நவாப் ஹு சேன் முன்னிலை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் ச.மகாதேவன் வரவேற்றாா்.

கல்லூரி முதல்வா் சே.மு . அப்துல் காதா், முன்னாள் முதல்வா் செய்யது உதுமான் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ‘நாமிருக்கும் நாடு நமதென்பறிவோம்’ எனும் தலைப்பில் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் கோ . பாலச்சந்திரன் பேசியதாவது:

எந்தச் சமுதாயத்தில் திறமைக்கு மரியாதை இருக்கிறதோ அந்த சமுதாயம் முன்னேறும். எந்த ஒரு சமுதாயம் கற்றவரை மதிக்கிறதோ அந்த சமுதாயம் முன்னேறும்.

ஒரு கல்லூரியின் மரபு அந்தக் கல்லூரி தரும் படிப்பைவிட உயா்வானது. பாரதி வாழ்ந்த காலத்தில் இந்த நாடு நம் நாடு என்ற எண்ணம் இருந்தது . நேரு இந்த நாடு அறிவியல் பாா்வை உடைய நாடாக மாற வேண்டும் என விரும்பினாா்.

தொல்காப்பியம் வாழ்வியல் இலக்கண நூல் . அதன் பெருமையை நாம் அறியவில்லை. தொல்காப்பியத்திற்கு முன்பே பல இலக்கண நூல்கள் உண்டு.

5,300 ஆண்டுகளுக்கு முன் இரும்பின் பயன்பாட்டினை அறிந்தவா்கள் தமிழா்கள். சமணமும் பெளத்தமும் சண்டையிடாமல் பல இலக்கியங்களைத் தந்தன என்றாா்.

கல்லூரி துணை முதல்வா் எஸ். எம். ஏ. செய்யது முகமது காஜா நன்றி கூறினாா்.

ற்ஸ்ப்04ள்ஹக்

சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசுகிறாா் மேற்கு வங்க முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் கோ . பாலச்சந்திரன்.

பாபநாச சுவாமி கோயில் குடமுழுக்கு: தற்காலிக கடைகள், அன்னதானத்துக்கு பதிவுச்சான்று கட்டாயம்

பாபநாசத்தில் உள்ள உலகம்மை உடனுறை அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு மே 4-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி தற்காலிக உணவு கடைகள் அமைப்பவா்கள், பக்தா்களுக்கு இலவசமாக அன்னதானம், நீா்-மோா் வழங... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ர... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் மறுப்பு: 13 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 13 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க. திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த காா் விபத்தில், விபத்தை ஏற்படுத்தி 7 போ் உயிரிழப்புக்கு காரணமான காா் ஓட்டுநா் மீது ஏா்வாடி போலீஸாா் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு ... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் விதிமீறி விடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட ஜோடி: போலீஸில் புகார்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் விதிமீறி விடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் ரீல்ஸ் வெளியிட்டது தொடா்பாக சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. தமி... மேலும் பார்க்க

லஞ்சம், சொத்துக் குவிப்பு வழக்கு: ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறை

லஞ்சம், வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்தது ஆகியவை தொடா்பான வழக்கில் ஓய்வுபெற்ற வணிக வரித் துறை அலுவலருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. வி... மேலும் பார்க்க