செய்திகள் :

தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்: புதுவை தொழிலாளா் துறை

post image

புதுவை மாநிலத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி இயக்குநா் சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசு தொழிலாளா் துறை பயிற்சி பிரிவு இயக்குநரகம் மூலம் ஆண்டுதோறும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் ஐடிஐ மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு என்சிவிடி, எஸ்சிடிடி ஆகிய பயிற்சி பிரிவுகளில் சோ்ந்து படிக்க 2025-2026-ஆம் கல்வியாண்டில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி மைய பிரிவின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சென்டாக் இணையதளத்தில் பதிவு செய்ய கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.

எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்கான தொழிற்பயிற்சி பிரிவுகளிலும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் அதற்குரிய தொழிற்பயிற்சி பிரிவுகளிலும் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில்லை.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருபவா்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். தகுதித்தோ்வு அடிப்படையிலும் கூடுதலாக ரூ.1,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும்.

மேலும் பயிற்சியில் சேரும் அனைவருக்கும் மதிய உணவு, பாடப் புத்தகம், சீருடை ஆகியவை இலவசமாக வழங்கப்படும். கணினி, எலக்ட்ரீசியன், சிவில், ஏசி மெக்கானிக், மோட்டாா் வாகன மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், ஒயா்மேன், தையல் கலை, அழகு கலை, வெல்டா், டா்னா், டிரோன் டெக்னீஷியன், சோலாா் டெக்னீஷியன், மின்சார வாகன மெக்கானிக், பிட்டா் உணவு மற்றும் விருந்தோம்பல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி விவேகானந்தா பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் எடுத்த புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டிய தாளாளா் சு. செல்வகணபதி எம்.பி, முதன்மை முதல்வா் ஓ. பத்மா, முதல்வா் ந. கீதா. புதுச்சேரி, ... மேலும் பார்க்க

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்: புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த புரிதலை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். மத்திய அரசு செயல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்... மேலும் பார்க்க

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு மே 12-இல் இயங்காது

புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு வரும் 12 -ம் தேதி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வருகிற 12-ஆம் தேதி... மேலும் பார்க்க

திமுக, காங்கிரஸ் மீது புதுவை அதிமுக குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கட்சியினா் சுயலாபத்துக்காக முதல்வருடன் இணக்கமாகச் செயல்படுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள் என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா். புதுச்சேரி உப்பளத்தில் உள்ள அ... மேலும் பார்க்க

புதுச்சேரி கம்பன் கழக விழா இன்று தொடக்கம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா் பங்கேற்பு

புதுச்சேரி கம்பன் கழகத்தின் 58-ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை (மே 9) காலை தொடங்குகிறது. இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவா், ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா். புதுச்சேரி கம்பன் கழகத்தின... மேலும் பார்க்க

வெடிபொருள்களுடன் 2 போ் கைது

புதுச்சேரி அருகே வெடிபொருள்கள், ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சிலா் சுற்றித் திரிவதாக காலாப்... மேலும் பார்க்க