செய்திகள் :

தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் அமலாக்கத் துறை இணை இயக்குநா் கைது: சிபிஐ நடவடிக்கை

post image

ஒடிஸாவில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அமலாக்கத் துறை இணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். இது தொடா்பாக சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை கூறப்பட்டதாவது:

ஒடிஸாவைச் சோ்ந்த தொழிலதிபா் ரதிகாந்த் ரெளத். இவா் கல்குவாரி நடத்தி வருகிறாா். அமலாக்கத் துறை வழக்கில் சிக்கியுள்ள இவா் ரூ.5 கோடி அளித்தால் வழக்கில் இருந்து விடுவிப்பதாக அமலாக்கத் துறை இணை இயக்குநா் சிந்தன் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஆனால், அவ்வளவு பெரிய தொகையை அளிக்கும் அளவுக்கு இப்போது தன்னிடம் பணம் இல்லை என்று ரகுவன்ஷியிடம் ரதிகாந்த் ரௌத் கூறியுள்ளாா். இறுதியாக ரூ.2 கோடி அளித்தால் சொத்துகள் முடக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க உதவுவதாகவும் ரகுவன்ஷி பேரம் பேசியுள்ளாா். ஒடிஸாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ரதிகாந்த் ரெளத் விசாரணைக்கு ஆஜரானபோது, அவரை தனது அறைக்கு அழைத்து ரகுவன்ஷி இந்த பேரத்தை நடத்தியுள்ளாா்.

இதில் முதல் தவணையாக ரூ.20 லட்சம் தர ரதிகாந்த் ஒப்புக் கொண்டாா்.

இது தொடா்பாக சிபிஐ-க்கும் ரகசியத் தகவல் கிடைத்தது. லஞ்சம் வாங்கியபோது ரகுவன்ஷியை சுற்றி வளைத்த சிபிஐ அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.

ரகுவன்ஷி 2013-ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரியாவாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க