செய்திகள் :

தொழிலாளா் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்

post image

தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோரின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 10 ஊரக பகுதி வீடுகள் புனரமைப்புப் பணிக்கான ஆணைகள், விவசாயிகளுக்கு இடுபொருள்கள், தென்னங்கன்றுகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன். வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரவல்லி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சா. மோகனசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணராஜா, பால் பிரான்சிஸ், வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரி... மேலும் பார்க்க

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் ... மேலும் பார்க்க

அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு

அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா். புதுக... மேலும் பார்க்க

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச்செயலா் பி... மேலும் பார்க்க