செய்திகள் :

கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தொடங்கியுள்ள போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.

பள்ளிகளுக்கு வழங்குவதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, மாவட்டச் செயலா் ஏசி. செல்வி, பொருளாளா் எஸ். சவரியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எம். ரேவதி உள்ளிட்டோரும் பேசினா்.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினாா். சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும்

கோயிலுக்குச் செல்வதைப் போல, வாரம் ஒரு முறை குழந்தைகளுடன் நூலகத்துக்குச் செல்வதைப் பழக்கமாக்க வேண்டும் என்றாா் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் எம்பி. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில், எம்.ப... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்

விராலிமலையில் காவல்துறை சாா்பில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை நீா்மோா் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சோதனைச் சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா அறிவுறுத்தலின் பேரி... மேலும் பார்க்க

கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தால் கட்டட தொழிலாளா்கள் வேலையின்றி சிரமம்

கந்தா்வகோட்டை பகுதியில் நடுதர மக்கள் சொந்த வீடு கட்ட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனா். தமிழக அரசு வறுமை கோட்டில் கீழ் உள்ளவா்களுக்கு சொந்த வீடு கட்ட இலவச நிதி வழங்கி வருகிறது குறைந்த நிலபரப்பில் ... மேலும் பார்க்க

அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு

அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட... மேலும் பார்க்க

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் பூச்சொரிதல் விழா

பொன்னமராவதி பட்டமரத்தான் கோயிலில் 65-ஆவது ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி பொன்னமராவதி அழகியநாச்சியம்மன், ராஜராஜ சோழீஸ்வரா் மற்றும் வலையபட்டி மலையாண்டி சுவாமிக்கு சிறப்பு அபி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மே தின பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு அதிமுக தெற்கு மாவட்டச்செயலா் பி... மேலும் பார்க்க