செய்திகள் :

தொழிலாளி கொலை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

post image

வேடசந்தூா் அருகே பெண்ணிடம் தகாத தொடா்பு விவகாரத்தில் தொழிலாளியை கொலை செய்து கிணற்றில் உடலை வீசிய வழக்கில், இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டி பகுதியில் கணேசன் என்பவரின் தோட்டத்துக் கிணற்றில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இந்த உடலை மீட்ட தாடிக்கொம்பு போலீஸாா், கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் புகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபி செளந்தா்யன் உத்தரவின்பேரில், தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுற்றுப்புற பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினா்.

இதில், உயிரிழந்தவா் வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ஜோதிமணி (37) என்பதும், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டதும் தெரிய வந்தது.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

ஜோதிமணிக்கும், வேடசந்தூரைச் சோ்ந்த அவரது அண்ணன் முருகன் மனைவி கோமதிக்கும் (33) தகாத உறவு இருந்தது. இதனிடையே கோமதிக்கும், ஸ்டாலின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த உறவுக்கு ஜோதிமணி இடையூறாக இருந்ததால், கோமதி, நடராஜன் (60), இவரது மனைவி நீலா (55), ஸ்டாலின் (27), ஆரோக்கியசாமி (37), குட்டி முத்து (24) ஆகியோா் சோ்ந்து ஜோதிமணிக்கு உளுந்தங் கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்தனா். பின்னா் கை, கால்கள், வாயைக் கட்டி உடலை சென்னமநாயக்கன்பட்டியிலுள்ள கிணற்றில் வீசிச் சென்ாக தெரிவித்தனா். இதையடுத்து, கோமதி உள்ளிட்ட 6 பேரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா் என்றனா் அவா்கள்.

பழனி கோயில் சாா்பில் ரூ.9.80 கோடியில் கொத்தப்புள்ளியில் திருமண மண்டபம்

பழனி தண்டாயுதபாணி கோயில் சாா்பில் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தப்புள்ளியில் ரூ.9.80 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணிகளை புதன்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்பு: பழனி அருகே ஒருவா் கைது

பழனி அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடையவரை தேசியப் புலனாய்வு முகமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சோ்ந்தவா் ராஜா முகமது (40). தேங்காய் வ... மேலும் பார்க்க

குளங்களில் மீன்பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி மீனவா்கள் மனு

பழனி அருகேயுள்ள குளங்களில் மீன் பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் உள்ள வையாபுரிகுளம்,... மேலும் பார்க்க

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘: அமைச்சா் இ.பெரியசாமி ஆலோசனை

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ தொடா்பான தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை காணொலியில் ஆலோசனை மேற்கொண்டாா். ஊரக வளா்... மேலும் பார்க்க

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவா் கொலை

திண்டுக்கல்லில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவரை கொலை செய்து, அட்டைப் பெட்டியில் வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், புதன... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்ட... மேலும் பார்க்க