செய்திகள் :

தொழில்முனைவோருக்கான மையமாக மாறும் மிசோரம்: பிரதமர் மோடி

post image

வடகிழக்கு மாநிலம் தொழில்முனைவோருக்கான முக்கிய மையமாக மாறுகிறது; 4,500 புத்தாக்க நிறுவனங்கள் செயல்படுகின்றன என்று மிசோரமில் பிரதமர் மோடி கூறினார்.

மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நாள்கள் பயணத்தில் முதல்கட்டமாக வடகிழக்கு மாநிலமான மிசோரம் வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.9,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தலைநகர் ஐஸாவில் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது, நடப்பு, 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நமது நாட்டின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடு என்பதே.

மக்களின் குடும்ப வாழ்க்கையை எளிதாக்குவதற்காக, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி, அத்தியாவசிய பொருள்களின் மீதான வரிகளைக் குறைப்பதில் சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்றுமதியிலும் வளர்ச்சியையும் கண்டு வருகிறோம். ஆபரேஷன் சிந்தூரின் போது, ​​பயங்கரவாதத்தை ஆதரித்தவர்களுக்கு நமது வீரர்கள் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் அனைவருமே பார்த்தீர்கள்.

நமது ஆயுதப் படைகள் குறித்து ஒட்டுமொத்த நாட்டு மக்களும் பெருமித உணர்வால் நிறைந்திருந்தனர். இந்த ஆபரேஷனில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் நமது நாட்டைப் பாதுகாப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றின.

நமது பொருளாதாரம் மற்றும் உற்பத்தித் துறையின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு குடிமகனின், ஒவ்வொரு குடும்பத்தின் மற்றும் ஒவ்வொரு மாநிலத்தின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது.

மக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம்தான் வளர்ந்த இந்தியா கட்டமைக்கப்படும் என்பதில் உறுதியாக இருக்கறோம். எனவே இந்தப் பயணத்தில், மிசோரம் மக்கள் மிக முக்கியமான பங்கை வகிப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்று பிரதமர் கூறினார்.

The northeastern state is becoming a major hub for entrepreneurship; 4,500 innovative companies are operating, said Prime Minister Modi in Mizoram.

இதையும் படிக்க... முதல் பிரசாரம்: திருச்சியில் தவெக தலைவர் விஜய்! குவிந்த தொண்டர்கள்!

மணிப்பூர் அமைதிக்காக பாடுபடுவேன்! மோடி வாக்குறுதி!

மணிப்பூரின் அமைதிக்காக பாடுபடுவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.மணிப்பூரில் இனமோதல்கள் ஏற்பட்ட பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொண்டார்.ம... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமரின் உருவப்படத்தை பரிசளித்த சிறுமி!

மணிப்பூரின் சுரசந்த்பூருக்கு முதல்முறையாக வருகை தந்துள்ளது பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறுமி ஒருவர் அவரின் உருவப்படத்தை பரிசாக அளித்துள்ளார். மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்... மேலும் பார்க்க

மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும்! - முன்னாள் முதல்வர் பைரன் சிங்

பிரதமர் மோடியின் வருகை மணிப்பூரில் அமைதிக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் பைரன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் வன்முறை தொடங்கி 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி இன்று மணிப்பூர் சென்றுள்ளார்... மேலும் பார்க்க

மணிப்பூரில் பிரதமர் மோடி!

மணிப்பூர் இனமோதலுக்குப் பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளார்.மிசோரம் பயணத்தை முடித்துவிட்டு, மணிப்பூரின் சுராசந்த்பூருக்குச் சென்றுள்ள பிரதமருக்கு மாநில... மேலும் பார்க்க

செப். 27-ல் பிரதமர் மோடி ஒடிசா பயணம்!

பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27 ஆம் தேதி ஒடிசாவின் பெரஹம்பூரில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்ற உள்ளதாக மாநில வருவாய் அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார். பிரதமர் மோடியின் வருகைக்கான இறுதித்திட்டம்... மேலும் பார்க்க

பிரதமரின் பயணம்.. வளர்ச்சியின் புதிய அத்தியாயம்: ஒடிசா முதல்வர்!

பிரதமர் மோடியின் ஐந்து மாநில பயணம் நாடு முழுவதும் முன்னேற்றத்திற்கும், வேகத்திற்கு ஒரு சான்று என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்தார். மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய... மேலும் பார்க்க