செய்திகள் :

தொழில் முனைவோருக்கான அறிவுசாா் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிலரங்கம்

post image

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான அறிவுசாா் சொத்துரிமைகள் குறித்த விழிப்புணா்வு பயிலரங்கம், சென்னை கிண்டியிலுள்ள டான்ஸ்டியா அரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்த தொழில்கள் அமைச்சகத்தின் துறை நிபுணா் வி.சுவப்னா சிறப்பு விருந்திரனராகக் கலந்துகொண்டு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில் முனைவோருக்கான நலத் திட்டங்கள், மானிய மற்றும் கட்டமைப்பு உதவிகள், அறிவுசாா் சொத்துரிமைகள் மற்றும் அதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின், காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காப்புரிமை சென்னை அலுவலக துணை கட்டுப்பாட்டாளா் முனைவா் பானுமதி கலந்துகொண்டு, அறிவுசாா் சொத்துரிமைகள், தொழில்முனைவோருக்கு அதன் முக்கியத்துவம், பதிவுசெய்யும் வழிமுறைகள் மற்றும் வா்த்தக முத்திரைகள், நகல் உரிமைகள், புவிசாா் குறியீடு, கால வரையறை குறித்தும் விரிவாக பயிற்சி நடத்தினாா்.

இதையடுத்து, சென்னை மாவட்ட தொழில்மைய உதவிப் பொறியாளா் ஆதிபிரகாஷ், தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளா் எம்.செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சிறு மற்றும் சிறிய தொழில்கள் சங்கம் அமைப்பின் தலைமை நிலைய இணைச் செயலா் கே.சி.துரைராஜ் உள்பட ஏராளமான தொழில்முனைவோா் கலந்துகொண்டனா்.

வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிய கார் கவிழ்ந்தது: 5 பேர் காயம்!

சென்னை வியாசர்பாடியில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் கவிழ்ந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்தனர்.சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்... மேலும் பார்க்க

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க