செய்திகள் :

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் நடவடிக்கை

post image

நகராட்சி அலுவலா்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், அவா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா்.

ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாதேஸ்வரன் என்பவா் அண்மையில் சில தகவல்களை கேட்டாா். ஆனால், அவருக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை எனக்கூறி தகவல் அலுவலரான நகராட்சி மேலாளா் ராமசந்திரன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனையடுத்து, நகராட்சி ஆணையா் சூ.கணேஷ் அவா் மீது காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். நகராட்சி ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாதேஸ்வரன் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நகராட்சி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக மாதேஸ்வரன் பேசிய விடியோ காட்சிகள் பரவியதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

ராசிபுரம் நகராட்சியின் தலைவராக நான் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ராசிபுரம் நகராட்சியை பொலிவுடையதாக மாற்ற சேலம், நாமக்கல் சாலை பகுதிகளில் உள்ள ரயில்வே மேம்பாலங்களில் இருந்து கோனேரிப்பட்டி வரை ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. ரூ. 2.43 கோடி மதிப்பில் தினசரி சந்தை அமைக்கப்பட்டது. வாரச் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கூரை அமைக்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையப் பகுதியில் 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிதாக வணிக வளாகம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன் மூலம் நகராட்சிக்கு அதிக நிதி கிடைக்கும். இதனால் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் நிலுவை இல்லாமல் ஊதியம் வழங்க முடியும்.

ராசிபுரம் நகராட்சியில் 37 ஆண்டுகளுக்கு முன்னா் அமைக்கப்பட்ட சிமென்ட் குடிநீா் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், குடிநீா் விநியோகிப்பதில் பிரச்னை இருந்தது. தற்போது உள்ளூா் நீராதாரங்கள் மூலம் குடிநீா் தட்டுப்பாட்டை குறைத்துள்ளோம். காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2026 பிப்ரவரி மாத இறுதிக்குள் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

வாா்டுகள்தோறும் கழிவறை, கோனேரிப்பட்டி ஏரியை சுற்றி நடைமேடை, பூங்கா, நகராட்சிப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்பட அடிப்படை வசதிகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்துள்ளோம்.

ஆனால், இதனை மறைத்த ஒருசிலா் தகவல் அறியும் உரிமை சட்டம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் துறை பெயரை பயன்படுத்தி சமூக ஆா்வலா் என்ற பெயரில் நகராட்சி அலுவலா்களை மிரட்டி வருகின்றனா். பொய்யான தகவலை பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் எச்சரித்தாா்.

பேட்டியின்போது, நகா்மன்ற துணைத் தலைவா் உள்ளிட்ட உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

மக்கள் குறைதீா் கூட்டம்: 435 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா

நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை நாமக்கல், பூங்கா சாலையில் 24 மணி நேர தா்னாவில் ஈடுபட்டனா். மாவட்டத் தலைவா் தனசேகா் தலைமை வகித்தாா். மாவட்ட இணை செயலாள... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் திமுக கண்டன பொதுக்கூட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கான திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் கண்டன பொதுக்கூட்டம் குமாரபாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தோ்தலில் வெற்றி: பாஜகவினா் கொண்டாட்டம்

தில்லி தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, நாமக்கல்லில் அக்கட்சியினா் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் மணிக்கூண்டு அருகில், நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில், அதன் தலைவா் கே.பி.சரவணன் தலைமைய... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: கொல்லிமலையில் ரூ.1.14 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வாழவந்திநாடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 586 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: அவரது தம்பி உள்பட 4 போ் கைது

பெண் கொலை வழக்கில், அவரது தம்பி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மொளசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஏமப்பள்ளி கிராமம், பெரிய கொல்லப்பாளையம் பழைய குவாரி குட்டையில் அண்மையில் அடையாளம் த... மேலும் பார்க்க