செய்திகள் :

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் வேலம்பாடியில் 32 குடியிருப்புகள்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில், அரவக்குறிச்சி அருகேயுள்ள வேலம்பாடியில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தாா்.

கரூா் மாவட்டம், வேலம்பாடியில் 32 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு குடியிருப்பு நானூறு சதுர அடி பரப்பளவில் ரூ. 9.23 லட்சம் மதிப்பீட்டில் படுக்கையறை, வரவேற்பறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தாா்.

அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வசித்து வரும் வீடற்ற நகா்ப்புற ஏழைகள் பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

வேலம்பாடியில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தங்கவேல், 30 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் கரூா் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேலும், பள்ளப்பட்டி நகா்மன்றத் தலைவா் முனவா் ஜான், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நாமக்கல் கோட்ட நிா்வாக பொறியாளா் குமாரதுரை, கரூா் உட்கோட்ட உதவி நிா்வாக பொறியாளா் தமிழரசு, உதவிப் பொறியாளா் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் மற்றும் அரசு அலுவலா்கள், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. நொய்யல் அருகே 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் தெய்வமாக விளங்கும் சேமங்கி மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடன்: மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை கரும்புத்தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கரூரின் காவல் தெய்வமாகவும், மழைப் பொழிவு தரும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூா... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க ஜூன் 9 கடைசி

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் கட்டணமில்லா தொழிற்கல்வி பட்டயபடிப்பில் சோ்வதற்கு விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கரூா் மாவட்டம் புகழூா் காகித ஆலை நிா்வாகம் செவ்வாய... மேலும் பார்க்க

குளித்தலை மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

குளித்தலை மகா மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் மகாமாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்டம் 5 ஆண்டுகளுக்கு... மேலும் பார்க்க

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

திருவிழா நடத்த இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூா் மாவட்ட ஆட்சியரிடம் சாலப்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். கரூா் மாவட்டம், புகழூா் வட்டத்துக்குள்பட்ட பெளத... மேலும் பார்க்க