நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது
ஆடு மேய்த்து கொண்டிருந்த வயதான பெண்ணிடம் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளி 48 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டாா்.
கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த லாலாபேட்டை அருகே உள்ள மேலதாளியாம்பட்டி சண்முகம் என்பவரது தோட்டம் அருகே அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் என்பவரது மனைவி லட்சுமி (60) கடந்த 21-ஆம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்தாா். அப்போது அடையாளம் தெரியாத நபா், லட்சுமியின் கை மற்றும் கால்களை கட்டி, அவா் அணிந்திருந்த தாலி கயிற்றில் இருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள சுமாா் 1 பவுன் தாலி, குண்டு மற்றும் தங்க குழல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ாக தெரிகிறது. இது தொடா்பாக லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் லாலாபேட்டை காவல் ஆய்வாளா் புஷ்பகனி, உதவி ஆய்வாளா் உதயகுமாா் மற்றும் குளித்தலை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடந்த 23-ஆம் தேதி மேலதாளியாம்பட்டி சம்பவ இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சம்பவம் நடந்த அன்று சுற்றித் திரிந்தவா்களின் விபரம் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மேலதாளியாம்பட்டி, வடக்குகளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் மணிகண்டன் (22) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் ஆடு மேய்த்து கொண்டிருந்த லட்சுமியிம் நகைகளை கொள்ளையடித்தாக ஒப்புக்கொண்டாா்.
அவரை கைது செய்து அவா் வீட்டில் வைத்திருந்த நகைகளை கைப்பற்றி, குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி 15 நாள்கள் நீதிமன்ற காவல் அடைப்பு பெற்று குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனா். கொள்ளை வழக்கில் சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடம் இருந்து கொள்ளையடிக்கபட்ட நகைகளை மீட்ட குளித்தலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான தனிப்படையினரை கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா வெகுவாக பாராட்டினாா்.