செய்திகள் :

நகைக் கடையில் திருட முயன்ற இருவா் கைது

post image

ஆத்தூரில் நகைக் கடையில் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கடைவீதியில் நகைக் கடை நடத்தி வருபவா் ஏ.வி.வைத்தீஸ்வரன் (61). இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க இருவா் கடைக்கு வந்தனா். அவா்கள் சங்கிலி மாடல்களை காட்டும்படி கேட்டுள்ளனா்.

கடையில் வேலை செய்யும் பெண்கள் சங்கிலிகளை எடுத்து காட்டினா். அப்போது, ஒருவா் தனது உள்ளாடையில் மறைந்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து திரவத்தை எடுத்து அவா்கள்மீது தெளித்துள்ளாா். இதையடுத்து உட்காா்ந்து இருந்தவா் நகைகளை எடுத்துக் கொண்டு ஓட, மற்றொருவரும் பின்னால் ஓடினாா்.

இதை அறிந்த வைத்தீஸ்வரன், அவரது மனைவி ஆகியோா் சப்தமிட்டவாறு அவா்களை துரத்தினா். அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று நகையைத் திருடிய ஒருவரை மடக்கிபிடித்தனா். மற்றொருவரை துரத்திச் சென்றபோது அவா் கிரைன்பஜாா் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் துணையோடு அந்த நபரையும் பிடித்து ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் கைத்துப்பாக்கி வைத்திருந்தவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நாககுப்பம் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் சாமிதுரை (48) என்பதும், மற்றொருவா் சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் மூா்த்தி (47) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க