செய்திகள் :

நடிகரின் பாதுகாவலருக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம்! ரூ.100 கோடி சொத்து?

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் பாதுகாவலருக்கு சம்பளமாக ரூ.15 லட்சம் வழங்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு நீண்டகாலமாகவே அச்சுறுத்தல்கள் இருந்து வருகின்றன. ஆகையால், ஒய் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் தனிப்பட்ட பாதுகாவலர்களும் எப்போதும் உடனிருப்பர்.

அந்த வகையில், சல்மான் கானின் பாதுகாவலரான ஷேரா என்றழைக்கப்படும் குர்மீத் சிங் என்பவர்தான் பெரிதும் நம்பிக்கை உடையவராகத் திகழ்கிறார். அவர்தான், சல்மான் கான் செல்லும் இடமெல்லாம் நிழல்போல பின்தொடர்கிறார்.

1995-லிருந்து சல்மான் கானுக்கு பாதுகாவலராக இருக்கும் ஷேராவை, சல்மான் கானின் சகோதரரான ஷோஹைல் கான்தான் நியமித்தார்.

சல்மான் கான் எங்கு சென்றாலும், அவருக்கு முன்பாக ஷேரா சென்று, அவரின் பாதுகாப்பை உறுதி செய்கிறார். ஷேரா உடனிருந்தால் மட்டுமே பாதுகாப்பாக உணர்வதாகவும் சல்மான் கான் தெரிவிக்கிறார்.

ஷேராவுக்கு மாதம் ரூ.15 லட்சம் சம்பளம் வழங்குவதுடன், அவருக்கு பல்வேறு சலுகைகளையும் சல்மான் கான் அளித்து வருகிறார். அவருக்கு ரூ.100 கோடிக்குமேல் சொத்து மதிப்பும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் ரூ.1.40 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் காரையும் ஷேரா வாங்கியிருந்தார்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஷேரா, தனது பணிக்கு இடையூறாக இருப்பதாக தலைப்பாகை மற்றும் தாடியையும் சல்மான் கானுக்காக அகற்றியதுடன், அவருக்காக உடலில் துப்பாக்கி குண்டை ஏற்கவும் தயார் என்று ஷேரா கூறுகிறார்.

இதையும் படிக்க:இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பாதிப்பு?

Salman Khan’s Bodyguard Shera Has Rs 100 Crore Net Worth

ஜிஎஸ்டி: இறுதியில் ராகுலின் ஆலோசனையைப் பின்பற்றிய பாஜக அரசு! - காங்கிரஸ்

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு மூலமாக மத்திய பாஜக அரசு, ராகுலின் அறிவுரையைப் பின்பற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியுள்ளார். மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் ப... மேலும் பார்க்க

சென்னை ஐஐடி மீண்டும் தேசிய தரவரிசையில் முதலிடம்: ஏழாவது ஆண்டாக ஆதிக்கம்!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடத்தைப் பிடித்து ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு(என்ஐஆர்எஃப்) 2025 கல்வி அமைச்சகத்தால் ஆண்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரி: செப்டம்பரில் மின்னணு பொருள்கள், கார் விற்பனை மந்தமாகவே இருக்கும்!

ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு வருகிற செப். 22 முதல்தான் அமலுக்கு வருவதால் அதுவரை மின்னணு பொருள்கள் மற்றும் வாகனங்களின் விற்பனை மந்தமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதார... மேலும் பார்க்க

பறவை மோதல்: பெங்களூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரத்து!

விஜயவாடாவிலிருந்து பெங்களூக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறவை மோதியதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் சென்றுகொண்... மேலும் பார்க்க

பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? முன்னணியில் தேவேந்திர ஃபட்னவீஸ்?!

பாரதிய ஜனதா கட்சி தனது புதிய தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தயாராகி வரும் நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னணி வேட்பாளராகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பாஜகவின் தற்போ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், வரவிருக்கும் பிகார் தேர்தலை மையமாக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என முன்னாள் மத்திய ... மேலும் பார்க்க