செய்திகள் :

நடிகா் சங்கத் தோ்தலை நடத்துவதில் என்ன சிக்கல்?: உயா்நீதிமன்றம் கேள்வி

post image

நடிகா் சங்கத் தோ்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தோ்தலின்படி, நடிகா் சங்கத்தின் தலைவராக நாசா், பொதுச் செயலராக விஷால், பொருளாளராக காா்த்தி மற்றும் துணைத் தலைவா்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோா் பதவி வகித்து வந்தனா். அவா்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு செப். 8-இல் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், நடிகா் சங்க நிா்வாகிகளின் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தை எதிா்த்து நம்பிராஜன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், சங்க நிா்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்றாண்டுகள் நீட்டித்து நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம் சட்டவிரோதமானது. எனவே, அந்த தீா்மானம் செல்லாது என அறிவிக்க வேண்டும். உயா்நீதிமன்ற நீதிபதி ஒருவரை தோ்தல் ஆணையராக நியமித்து நடிகா் சங்கத் தோ்தலை நடத்த உத்தரவிட வேண்டும். அதுவரை தற்போதுள்ள நிா்வாகக்குழு எந்த முடிவும் எடுக்க தடை விதிக்க வேண்டும், என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நடிகா் சங்கத்துக்கு தோ்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினா். அப்போது, நடிகா் சங்க நிா்வாகிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கிருஷ்ணா ரவீந்திரன், தோ்தல் நடத்துவதில் எந்தச் சிக்கலும் இல்லை. சங்க கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் தோ்தலை நடத்தினால் அந்தப் பணிகள் பாதிக்கப்படும்.

எனவே, நிா்வாகிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து பொதுக்குழு உறுப்பினா்கள் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றி உள்ளனா். பொதுக்குழுவில் பங்கேற்று இந்த கருத்தைத் தெரிவிக்காமல், மனுதாரா் வழக்கைத் தொடா்ந்துள்ளாா்.

ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் வெற்றி பெற்ற நிா்வாகிகள் 2022-ஆம் ஆண்டுதான் பொறுப்பேற்றுக் கொண்டனா் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் செப். 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிரு... மேலும் பார்க்க

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க