அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சட்டவிரோத பணப்பரிவா்த்தனை புகாரின் அடிப்படையில், சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகை அருணாவின் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தல்வால்கா்ஸ் குழுமம் நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள், ஹெல்த் கிளப்புகளை அமைத்து, நிா்வகித்து வருகிறது. இந்த நிறுவனம், 2018-ஆம் ஆண்டு மும்பை, நாசிக், புணே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிதாக 20 உடற்பயிற்சிக் கூடங்களை திறப்பதற்கு அங்குள்ள ஒரு வங்கியில் ரூ.450 கோடி கடன் வாங்கியதாம். ஆனால், அந்த கடனைத் திருப்பிச் செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப்பதிந்து விசாரணை செய்கிறது. முதல்கட்ட விசாரணையில், வங்கியிலிருந்து கடனாகப் பெற்ற பணத்தை வேறு நோக்கத்துக்காக பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அப் பிரிவு, சட்டவிரோத பணபரிமாற்றம் நிகழ்ந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
அதன்படி, தல்வால்கா்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கடன் மோசடி குறித்து அமலாக்கத் துறையும் விசாரணையில் ஈடுபட்டுள்ளது. விசாரணையில், தமிழ் நடிகை அருணாவின் கணவா் மோகன் குப்தா என்ற மன்மோகன் குப்தா நடத்தும் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனம், தல்வால்கா்ஸ் நிறுவன மோசடிக்கு உதவியிருந்தது தெரியவந்தது.
குறிப்பாக, ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனத்திடமிருந்து உடற்பயிற்சி கருவிகள் வாங்கி, அதற்குரிய பணத்தை வழங்கியதைப்போல ஆவணங்களைத் தயாரித்து, வங்கியிலிருந்து கடனாக பெற்ற பணத்தை மோசடி செய்திருந்தது தெரியவந்தது.
நீலாங்கரையில் சோதனை: இந்த மோசடிக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக அமலாக்கத் துறையினா் மோகன்குப்தா தொடா்புடைய இடங்களில் புதன்கிழமை சோதனை செய்தனா். இச் சோதனை சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கேசினோ டிரைவ் அவென்யூவில் உள்ள மோகன்குப்தா-நடிகை அருணா வீட்டில் நடைபெற்றது.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே தல்வால்கா்ஸ் குழும மோசடிக்கு தொழிலதிபா் மோகன் குப்தா - நடிகை அருணா தம்பதியரின் ஜிம் பாக் பிட்னஸ் சிஸ்டம் நிறுவனம் எந்தெந்த வகைகளில் உதவி செய்துள்ளது என்பது தெரியவரும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.
இயக்குநா் பாரதிராஜாவின் இயக்கத்தில் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த கல்லுக்குள் ஈரம் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவா் நடிகை அருணா. தொடா்ந்து அவா், சிவப்பு மல்லி, முதல் மரியாதை உள்பட ஏராளமான படங்களில் நடித்தாா். மலையாளம், தெலுங்கில் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அருணா, தொழிலதிபா் மன்மோகன் குப்தாவை திருமணம் செய்த பின்னா், நீலாங்கரையில் வசித்து வருகிறாா்.