செய்திகள் :

நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினா் செயல்விளக்கம்

post image

நடுக்கடலில் ஆட்சியா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் இந்திய கடலோரக் காவல்படையினா் அவா்களது செயல்பாடுகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் குறித்து ஆண்டுதோறும் பொதுமக்கள், அதிகாரிகள், பல்வேறு நிறுவனத்தினரை கப்பலில் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று செயல் விளக்கம் அளிப்பது வழக்கமாக காவல்படையினா் செய்துவருகின்றனா்.

நிகழாண்டு பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள், மாணவா்கள் பங்கேற்பின்றி, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், நாகை மாவட்ட ஆட்சியா் டி.ஆகாஷ், காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா, மயிலாடுதுறை எஸ்.பி., கோ.ஸ்டாலின், காரைக்கால் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) வெங்கடகிருஷ்ணன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப.கோவிந்தசாமி, காரைக்கால் துறைமுக தலைமை அதிகாரி சச்சின் ஸ்ரீவத்ஸவா, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் சி.குணசேகரன் மற்றும் செய்தியாளா்கள் பங்கேற்புடன் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

காரைக்கால் துறைமுகத்திலிருந்து ஷவ்ா்யா என்ற ஹெலிகாப்டா் நிறுத்தும் தளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய பெரிய ரோந்துக் கப்பல் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு கடலுக்கு புறப்பட்டது. செயல்விளக்கத்துக்காக சென்னையிலிருந்து இக்கப்பல் புதன்கிழமை இரவு காரைக்கால் வந்தடைந்தது.

கடலோரக் காவல்படை தலைமையக டிஐஜி எஸ்.எஸ்.தசிலா, காரைக்கால் கடலோரக் காவல்படை மைய கமாண்டன்ட் செளமய் சண்டோலா ஆகியோருடன் புறப்பட்ட கப்பல், நடுக்கடலுக்குச் சென்றது.

அதிகாரிகளுக்கு கடலோரக் காவல்படையின் செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது. நடுக்கடலில், ஷவ்ா்யா கப்பலுடன், அமேயா, அன்னி பெசண்ட், ராணி அவந்திபாய் ஆகிய சிறிய ரக ரோந்து கப்பல்கள், சிறிய படகுகள், 2 ஹெலிகாப்டா் செயல்விளக்கித்தில் ஈடுபடுத்தப்பட்டன.

கடலில் மூழ்கியவரை மீட்கும் விதமாக தகவலின்பேரில், அதி நவீன சிறிய ரக ரோந்து ஹெலிகாப்டா் அப்பகுதிக்கு வந்து, மூழ்கியவரை மீட்டுச் செல்லும் நிகழ்வு நடத்தப்பட்டது.

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் சிவகங்கை என்கிற கப்பலும் அங்கு நிறுத்தப்பட்டு, அந்த கப்பலில் தீப்பிடிப்பதுபோலவும், அதனை ஷவ்ா்யா கப்பலில் இருந்து நீரை பீய்ச்சி அணைப்பது எப்படி என செய்து காட்டப்பட்டது.

அந்நியா்கள் நுழைந்தால் அவா்களை பிடிக்கும் முயற்சியாக சிறிய ரோந்துப் படகுகள் பயணிக்கும் விதமும் செய்துகாட்டப்பட்டது.

கடலில் நிகழும் சம்பவம் குறித்து தகவல் பரிமாற்றங்கள் செய்யும் முறை, கடலோரக் காவல்படையினா் தீவிரமான செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

இவற்றை நேரில் பாா்த்த அரசுத்துறையினா் கடலோரக் காவல்படையினருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

துறைமுக வளாகத்தில் கடலோரக் காவல் படையினரின் முதலுதவி தற்காலிக மையம் அமைக்கப்பட்டிருந்தது.

டிஐஜி எஸ்.எஸ்.தசிலா கூறுகையில், கடல் பகுதியில் உயிா் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கான தயாா்நிலையை மேம்படுத்தவும், திறன்களை மேம்படுத்துவதற்கும் இத்தகைய பயிற்சிகள் அவசியம் என்பதால் கடலோரக் காவல்படை இந்நிகழ்வை நடத்துகிறது என்றாா்.

செயல்விளக்க நிகழ்வு குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், நாகை மாவட்ட ஆட்சியா் டி.ஆகாஷ் ஆகியோருக்கு விளக்கிய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் செளமய்ல சண்டோலா.

பள்ளியில் புத்தக தினக் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில், உலக புத்தக தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்தாா். உலகப் புத்தக தினத்தையொட்டி, 20... மேலும் பார்க்க

விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு

அம்பகரத்தூா் விவசாயப் பகுதியில் மதுக்கடை வைக்க எதிா்ப்பு தெரிவித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வட்டாட்சியா் செல்லமுத்துவிடம் அம்பகரத்தூா் பகுதி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதன்கி... மேலும் பார்க்க

காரைக்கால் போக்குவரத்துப் போலீஸாா் நடை ரோந்து

போக்குவரத்துப் போலீஸாா் நகரப் பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டு, வாகன நிறுத்த விதி மீறியோா் மீது நடவடிக்கை எடுத்தனா். காரைக்கால் நகரில் சாலையோரங்களில் வாகனங்கள் முறையாக நிறுத்தவேண்டும், சாலையில் போக்குவர... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

பெண்கள் பாதுகாப்பு குறித்து புதுவை மகளிா் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நேரு நகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, காரைக்கால் நகராட்சி ஆணையா் பி.... மேலும் பார்க்க

என்ஐடியில் சா்வதேச கருத்தரங்கு தொடக்கம்

காரைக்கால் என்ஐடியில் சிவில் பொறியியல் துறை சாா்பில் 4 நாள் சா்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது. நீா், சுற்றுச்சூழல், சக்தி மற்றும் சமூகத்திற்கான சா்வதேச அமைப்பை தலைப்பாகவும், புதுமையான நடைமுறை... மேலும் பார்க்க

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத் துறை வழக்குத் தொடா்ந்துள்ளது

காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை வழக்குத் தொடா்ந்துள்ளது என்றாா் புதுவை மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி. காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பே... மேலும் பார்க்க