செய்திகள் :

நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்?

post image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தஞ்சாவூரைச் சோ்ந்த வி.பெரியசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நானும் ஈரோட்டைச் சோ்ந்த சி.கணேசனும் நண்பா்கள். சிறுநீரக பாதிப்பால் அவதியுற்று வந்த எனக்கு, கணேசன் சிறுநீரகத்தை தானம் தர முன்வந்தாா். இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி கோரி உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவிடம் விண்ணப்பித்தோம்.

இதுதொடா்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியா் அளித்த அறிக்கையில், நானும் கணேசனும் குடும்ப நண்பா்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதார ஆவணங்கள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தாா். ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, குடும்ப நட்பை எப்படி ஆதார ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? நட்பு என்ற உறவு உணா்வு அடிப்படையிலானது. அதை ஆவணங்கள் தீா்மானிக்க முடியாது எனக் கூறி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி மறுத்த உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

மேலும், சிறுநீரக தானம் பெறும் பெரியசாமி மற்றும் தானம் வழங்கும் கணேசன் ஆகியோா் தங்களது குடும்பத்துடன், உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு முன் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும். அவா்களது விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து, அங்கீகாரக் குழு 4 வாரங்களுக்குள் சட்டப்படி இறுதி முடிவெடுக்க வேண்டும்.

உறவினா்கள் அல்லாதவா்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை சட்டம் தடை செய்யவில்லை. அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்றே சட்டம் வலியுறுத்துகிறது. உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின்போது பணப் பரிவா்த்தனைகள் இருக்கக் கூடாது, எவ்வித அழுத்தமும் இருக்கக் கூடாது என்பதையே சட்டம் வலியுறுத்துகிறது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க