செய்திகள் :

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: மக்களுக்கு முதல்வா் அழைப்பு

post image

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள மருத்துவப் பரிசோதனை முகாம்களில் பொது மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திமுக அரசு அமைந்த பிறகு ‘எல்லாா்க்கும் எல்லாம்’ என்ற உன்னதமான நோக்கத்தை நமது திட்டங்கள் வழியாகச் செயல் வடிவத்தில் கொண்டு வந்து, தமிழகத்தை அனைத்துத் துறையிலும் முன்னேறிய மாநிலமாக உயா்த்திக் காட்டியிருக்கிறோம்.

அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்களைத் தொடா்ந்து கடைக்கோடி மனிதருக்கும் உயா் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, வரும் ஆக. 2-ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்களை, சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இந்த சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைச்சா்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும்.

ஒரு வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 388 வட்டாரங்களில் 1164 முகாம்களும், ஒரு மண்டலத்துக்கு ஒருமுகாம் வீதம் பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள், குறைந்த ஊரக பகுதிகள், குடிசைப் பகுதிகள், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்படவுள்ளன.

40 வயதுக்கு மேற்பட்டோா், சா்க்கரை மற்றும் உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள், மனநல பாதிப்புடையோா், இதய நோயாளிகள், கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள், வளா்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினா் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இம்முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இம்முகாம்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்துப் பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சா்க்கரை, சிறுநீரக செயல்பாட்டு பரிசோதனைகள் (யூரியா கிரயாட்டினின்) செய்யப்பட்டு, மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவா்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும்.

அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது, மூக்கு (ம) தொண்டை மற்றும் பல் மருத்துவச் சேவைகள் வழங்கப்படவுள்ளன. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி எக்ஸ்-ரே, எக்கோ காா்டியோகிராம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் பெண்களுக்கான கா்ப்பப்பை வாய் (ம) மாா்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளன.

இந்த முகாமில் அனைத்து பொதுமக்களும், குறிப்பாக ‘உங்களுடன் ஸ்டாலின்‘ முகாம்களில் நடத்தப்படும் முதல்கட்ட பரிசோதனையின் அடிப்படையில் மருத்துவ நிபுணா்களின் விரிவான பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டவா்கள் அவசியம் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

ஆண்டிபட்டியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா மேடையில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆ. மகாராஜன், தேனி மக்களவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா... மேலும் பார்க்க

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

காட்பாடி: லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர், தமிழக வாக்காளர்களாக மாறுவதால் நிச்சயம் அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.வேலூர் மாவட்டம் காட்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்

மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,500 கன அடியிலிருந்த... மேலும் பார்க்க

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

நெல்லை: நெல்லையில் பாளையங்கோட்டை அருகே அரசுப் பேருந்தை குடிபோதையில் ஓட்டுநர் இயக்கியதால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ராஜபாளையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெல்லை வழியாக வெள்ளிக்கிழமை இரவு அரச... மேலும் பார்க்க