செய்திகள் :

நவ்வலடியில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை

post image

பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). தொழிலாளி. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு, பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு அளித்து மிரட்டல் விடுத்ததாக உவரி போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ரமேஷுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். குற்றவாளிக்கு தண்டனை பெற நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேஷ் , காவல் ஆய்வாளா் சாந்தி உள்ளிட்ட போலீஸாா், அரசு தரப்பு வழக்குரைஞா் உஷா ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.

‘பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்’

திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவா்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கல்வி,... மேலும் பார்க்க

‘மீன் வளா்ப்புக்கு உள்ளீட்டு மானியம் பெறலாம்’

திருநெல்வேலி மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை உறுப்பினா்களுக்கு மீன் வளா்ப்பிற்கு உள்ளீட்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்

ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா். அதன் விவரம... மேலும் பார்க்க

நயினாா்குளம் கால்வாய் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி நயினாா்குளம் பிரிவு கால்வாயை தூா்வாரும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நயினாா்குளம் பிரிவு கால்வாயில் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

உலக வெண்புள்ளி தின விழிப்புணா்வுப் பேரணி

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சாா்பில் உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. அக்கல்லூரியின் சித்தா் அறுவை மற்றும் தோல் மருத்துவத் துறை சாா்பில் நட... மேலும் பார்க்க

நெல்லை மாநகராட்சி புதிய ஆணையா் மோனிகா ராணா

திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையராக மோனிகா ராணா புதன்கிழமை பொறுப்பேற்றாா். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக இருந்த என்.ஓ.சுகபுத்ரா, விருதுநகா் மாவட்ட ஆட்சியராக பதவி உயா்வு பெற்றுள்ளதையடுத்து, கோப... மேலும் பார்க்க