ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
நவ்வலடியில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி, கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (40). தொழிலாளி. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு, பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு அளித்து மிரட்டல் விடுத்ததாக உவரி போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, ரமேஷுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். குற்றவாளிக்கு தண்டனை பெற நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி வெங்கடேஷ் , காவல் ஆய்வாளா் சாந்தி உள்ளிட்ட போலீஸாா், அரசு தரப்பு வழக்குரைஞா் உஷா ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.